லிங்காயத், வீர சைவர்களுக்கு இடையே கலபுர்கியில் கடும் மோதல்! கொளுத்திப் போட்ட காங்கிரஸ் அரசு!

lingayat veerasaiva - 2026

பெங்களூரு: லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் என பரிந்துரை செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் லிங்காயத் மற்றும் வீரசைவப் பிரிவினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கலபுர்கியில் கடும் மோதல் மூண்டது. லிங்காயத் பிரிவினர் தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஒப்புதல் அளித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை தீர்மானம் குறித்து தகவல் வெளியே வந்ததும், அதனை பெரிய அளவில் கொண்டாட லிங்காயத் சமூகத்தினர் தெருவில் வந்து கொண்டாட்டம் போட்டனர். அப்போது, வீரசைவர்கள் அமைச்சரவை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரசைவ மரபின் உறுப்பினர்கள், நேருக்கு நேர் மோதினர். இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் எதிராக கருத்துகளை தெரிவித்து கைகலப்பில் இறங்கினர்.

முன்னதாக, நாகமோகன் தாஸ் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அங்கீகரித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் குறித்து தகவல் வெளியானதும், லிக்காயத் பிரிவினரிடையே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அதிகரித்தது.

அடுத்து வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி பிரிவினைவாத அரசியலில் இறங்கிவிட்டதையே இது காட்டுகிறது என்று பாஜக., கருத்து தெரிவித்துள்ளது. எனவே இது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று கூறியது பாஜக. ஆனால் லிங்காயத் சமூகத்தின் உறுப்பினர்கள் தங்களது நெடுநாள் போராட்டத்தின் பலன் இது என்று கூறினர். லிங்காயத் பிரிவினர் அரசியல் ரீதியாக செல்வாக்குள்ளவர்களாகத் திகழ்வது காங்கிரஸின் இத்தகைய முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories