லிங்காயத், வீர சைவர்களுக்கு இடையே கலபுர்கியில் கடும் மோதல்! கொளுத்திப் போட்ட காங்கிரஸ் அரசு!

lingayat veerasaiva - 2026

பெங்களூரு: லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் என பரிந்துரை செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் லிங்காயத் மற்றும் வீரசைவப் பிரிவினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கலபுர்கியில் கடும் மோதல் மூண்டது. லிங்காயத் பிரிவினர் தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஒப்புதல் அளித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை தீர்மானம் குறித்து தகவல் வெளியே வந்ததும், அதனை பெரிய அளவில் கொண்டாட லிங்காயத் சமூகத்தினர் தெருவில் வந்து கொண்டாட்டம் போட்டனர். அப்போது, வீரசைவர்கள் அமைச்சரவை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரசைவ மரபின் உறுப்பினர்கள், நேருக்கு நேர் மோதினர். இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் எதிராக கருத்துகளை தெரிவித்து கைகலப்பில் இறங்கினர்.

முன்னதாக, நாகமோகன் தாஸ் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அங்கீகரித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் குறித்து தகவல் வெளியானதும், லிக்காயத் பிரிவினரிடையே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அதிகரித்தது.

அடுத்து வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி பிரிவினைவாத அரசியலில் இறங்கிவிட்டதையே இது காட்டுகிறது என்று பாஜக., கருத்து தெரிவித்துள்ளது. எனவே இது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று கூறியது பாஜக. ஆனால் லிங்காயத் சமூகத்தின் உறுப்பினர்கள் தங்களது நெடுநாள் போராட்டத்தின் பலன் இது என்று கூறினர். லிங்காயத் பிரிவினர் அரசியல் ரீதியாக செல்வாக்குள்ளவர்களாகத் திகழ்வது காங்கிரஸின் இத்தகைய முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories