திருநெல்வேலி மாவட்டத்தில் 19.3.2018 மாலை 6.00 மணி முதல் 23.3.2018 மாலை 6.00 மணி வரை 144 தடையுத்தரவு – மாவட்ட ஆட்சியர் . கேரளாவிலிருந்து புறப்படும் ரத யாத்திரை 20 .3. 2018 அன்று புனலூரிலிருந்து செங்கோட்டை வந்தடைந்து – தென்காசி – கடையநல்லூர் – புளியங்குடி – வாசுதேவநல்லூர் – சிவகிரி வழியாக விருதுநகர் சென்றடைந்து பின்னர் 2 3.3.2018 அன்று கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லவுள்ளதால் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையை ஏற்று 19.3.2018 மாலை 6.00 மணி முதல் 23.3.2018 மாலை 6.00 மணி வரை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

