ஏப்.16 வரை கைது செய்ய சிபிஐ.,க்கு நீதிமன்றம் தடை!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

karthi cbi - 2026

புது தில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஏப்ரல் 16 வரை கைது செய்யக் கூடாது என்று சிபிஐ.,க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் தடை விதித்து, கார்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதை அடுத்து, அவர் முன் ஜாமின் கேட்டு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த ஜாமீன் மனு மீது மதியம் 3 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறியது நீதிமன்றம். பின்னர் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் வரும்  ஏப்.16 வரை கைது செய்ய தடை விதித்து, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க, முன் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கார்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், பல நீதிமன்றங்களில் வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்து, திசைதிருப்புகிறார் என்றும் கூறி, அவரை ஏமாற்றுக்காரர் என்று கூறியிருந்தது. இருப்பினும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி தற்போது கார்த்தி சிதம்பரம் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related articles

Recent articles

spot_img