இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள்!

isro gslv gsat 6a - 2026

தகவல் தொடர்புக்கு பயன்படும், ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோள் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் துவங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, பல நவீன செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது, தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன ஜிசாட்- 6 ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை 4:56க்கு விண்ணில் செலுத்தப் படுகிறது. இதற்காக, ஜியோ சின்க்ரனைஸ்ட் ரக ஜிஎஸ்எல்வி., எப் -8 ராக்கெட் பயன்படுத்தப் படுகிறது. இந்த ராக்கெட் ஏவப்படுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மதியம் 1:57க்கு துவங்கியது.

ஜிசாட் -6ஏ செயற்கைக்கோள் 2,140 கிலோ எடை கொண்டது. இது 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் பூமிக்கு அருகில் 170 கி.மீ. உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இதில் அலைபேசி தகவல் தொடர்புக்கு பயன்படும் சக்தி வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது செலுத்தப்படவுள்ள ராக்கெட் ஜிஎஸ்எல்வி., ரகத்தில் 12வது ராக்கெட். முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கபட்டுள்ள ஆறாவது கிரையோஜெனிக் எஞ்ஜின் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories