ஒரே நாளில் ஜாமீன்; மும்பை பறந்து வந்த சல்மான் கான்!

Salman khan 1 - 2026

மும்பை: மான் வேட்டை வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை அடுத்து அவர் இன்று மாலை மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மூன்றாவது மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை அடுத்து உடனே ஜோத்பூர் சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார். பின், ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு, நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி முன்பு வெள்ளிக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி மாற்றத்தால் உடனே வழங்கப்படவில்லை.

தொடர்ந்து சனிக்கிழமை இன்று, ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமாரை, சல்மான் கானுக்கு முன்னதாக தண்டனை வழங்கிய தேவ் குமார் காத்ரி சந்தித்துப் பேசினார். பின் நீதிமன்றம் கூடியதும் சல்மான் கானின் சகோதரி அல்விரா மற்றும் பாதுகாவலர் ஷேரா மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். 15 வது வழக்காக இருந்த சல்மான் கானின் ஜாமின் மனு முதலாவதாக விசாரிக்கப்பட்டது.

salman khan2 - 2026

சல்மான் கான் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சல்மான் கான் வழக்கறிஞர், சாட்சியம் நம்பத் தகுந்ததாக இல்லை என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

3 மணி அளவில் மீண்டும் நீதிமன்றம் வந்த நீதிபதி, சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சல்மான் கான் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றும், மே 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இரண்டு இரவுகளை சிறையில் கழித்த சல்மான் கான் இன்றே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாலை மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories