கர்நாடக சட்டசபைத் தேர்தல்: பாஜக.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

amith sha ediyurappa - 2026

புது தில்லி: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக., தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக., சார்பில் போட்டியிட சசிகலா ஜோலி, ரூபாலி நாயக் என பெண் வேட்பாளர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கர்நாடக சட்ட சபைக்கான தேர்தல் வரும் மே 12-ல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளது. அதற்காக, லிங்காயத் தனி மதம், காவிரி நீர் திறப்பு, மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளை அரசியல் ரீதியாக மாற்றி, வாக்காளர்களைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளது. அதற்கு ஏற்ப தமிழகத்திலும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக., காவிரி அரசியலைச் செய்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் என பலரின் படுகொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் திமுக., கூட்டணிகளில் அங்கம் வகித்த திருமாவளவன் உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற, தமிழகத்தில் காவிரியைப் பிரச்னையாக்கி அரசியல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் ஏற்கெனவே இருந்து இழந்த ஆட்சியை மீண்டூம் பெற பாஜக.,வினர் முயன்று வருகின்றனர். பாஜக.,வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா தலைமையில், தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பாஜகவினர். இதற்காக காங்கிரஸ், பாஜக., இரு கட்சிகளின் தலைவர்களான ராகுல் மற்றும் அமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு புறம் ம.ஜ.த., கட்சித் தலைவர் குமாரசாமி பிரசாரம் செய்து வருகிறார்.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

224 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு நடக்கு தேர்தலில், முதல் கட்டமாக, 72 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக., வெளியிட்டுள்ளது. இதில் 2 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிபானி தொகுதிக்கு சசிகலா ஜோலியும் , உத்தர கன்னடா மாவட்டத்தின் கர்வார் தொகுதிக்கு ரூபாலி நாயக்கும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

புதுதில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு விழாவில் பாஜக., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடக சட்டமன்றத்துக்கு வரும் மே மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே15 அன்று வெளியாகும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories