கர்நாடக சட்டசபைத் தேர்தல்: பாஜக.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

amith sha ediyurappa - 2026

புது தில்லி: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக., தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக., சார்பில் போட்டியிட சசிகலா ஜோலி, ரூபாலி நாயக் என பெண் வேட்பாளர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கர்நாடக சட்ட சபைக்கான தேர்தல் வரும் மே 12-ல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளது. அதற்காக, லிங்காயத் தனி மதம், காவிரி நீர் திறப்பு, மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளை அரசியல் ரீதியாக மாற்றி, வாக்காளர்களைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளது. அதற்கு ஏற்ப தமிழகத்திலும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக., காவிரி அரசியலைச் செய்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் என பலரின் படுகொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் திமுக., கூட்டணிகளில் அங்கம் வகித்த திருமாவளவன் உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற, தமிழகத்தில் காவிரியைப் பிரச்னையாக்கி அரசியல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் ஏற்கெனவே இருந்து இழந்த ஆட்சியை மீண்டூம் பெற பாஜக.,வினர் முயன்று வருகின்றனர். பாஜக.,வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா தலைமையில், தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பாஜகவினர். இதற்காக காங்கிரஸ், பாஜக., இரு கட்சிகளின் தலைவர்களான ராகுல் மற்றும் அமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு புறம் ம.ஜ.த., கட்சித் தலைவர் குமாரசாமி பிரசாரம் செய்து வருகிறார்.

224 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு நடக்கு தேர்தலில், முதல் கட்டமாக, 72 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக., வெளியிட்டுள்ளது. இதில் 2 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிபானி தொகுதிக்கு சசிகலா ஜோலியும் , உத்தர கன்னடா மாவட்டத்தின் கர்வார் தொகுதிக்கு ரூபாலி நாயக்கும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

புதுதில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு விழாவில் பாஜக., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடக சட்டமன்றத்துக்கு வரும் மே மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே15 அன்று வெளியாகும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories