December 5, 2025, 9:28 PM
26.6 C
Chennai

கர்நாடக சட்டசபைத் தேர்தல்: பாஜக.,வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

amith sha ediyurappa - 2025

புது தில்லி: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக., தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக., சார்பில் போட்டியிட சசிகலா ஜோலி, ரூபாலி நாயக் என பெண் வேட்பாளர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கர்நாடக சட்ட சபைக்கான தேர்தல் வரும் மே 12-ல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளது. அதற்காக, லிங்காயத் தனி மதம், காவிரி நீர் திறப்பு, மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்னைகளை அரசியல் ரீதியாக மாற்றி, வாக்காளர்களைச் சேர்க்கும் முயற்சியில் உள்ளது. அதற்கு ஏற்ப தமிழகத்திலும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக., காவிரி அரசியலைச் செய்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் என பலரின் படுகொலைக்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் திமுக., கூட்டணிகளில் அங்கம் வகித்த திருமாவளவன் உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற, தமிழகத்தில் காவிரியைப் பிரச்னையாக்கி அரசியல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் ஏற்கெனவே இருந்து இழந்த ஆட்சியை மீண்டூம் பெற பாஜக.,வினர் முயன்று வருகின்றனர். பாஜக.,வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா தலைமையில், தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பாஜகவினர். இதற்காக காங்கிரஸ், பாஜக., இரு கட்சிகளின் தலைவர்களான ராகுல் மற்றும் அமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு புறம் ம.ஜ.த., கட்சித் தலைவர் குமாரசாமி பிரசாரம் செய்து வருகிறார்.

224 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு நடக்கு தேர்தலில், முதல் கட்டமாக, 72 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக., வெளியிட்டுள்ளது. இதில் 2 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நிபானி தொகுதிக்கு சசிகலா ஜோலியும் , உத்தர கன்னடா மாவட்டத்தின் கர்வார் தொகுதிக்கு ரூபாலி நாயக்கும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

புதுதில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு விழாவில் பாஜக., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடக சட்டமன்றத்துக்கு வரும் மே மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே15 அன்று வெளியாகும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories