December 5, 2025, 8:22 PM
26.7 C
Chennai

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆனார் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே!

vishnu vhp - 2025

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக விஷ்ணு சதாசிவ் கோக்ஜே தேர்வு செய்யப் பட்டுள்ளார். அந்த அமைப்பில், 54 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றது. அதில், விஷ்ணு சதாசிவ் கோக்ஜே 131 வாக்குகள் பெற்றார். இதை அடுத்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச தலைவராகிறார் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே. பல ஆண்டுகளாக இருந்த பிரவீன் தகோடியாவின் சகாப்தம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

வி.ஹெச்.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மத ஆன்மிக அமைப்பாக, அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கரால் தொடங்கி வைக்கப் பட்டது. சுவாமி சின்மயானந்தர் ஆசியுடன் எஸ்.எஸ்.ஆப்தே உடன் இருந்து இந்த அமைப்பு 29-8-1964 அன்று தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம், ஆன்மிக ரீதியில், இந்து மக்களை ஓரணியில் திரட்டி, இந்து தர்மத்தை பாதுகாப்பது.

இந்த அமைப்பு, கோயில்களை கட்டுதல், புனரமைத்தல், பசு வதைத் தடை, பசுவைப் பாதுகாத்தல்,  இந்துக்களை மதமாற்றம் செய்வதைத் தடுத்தல், வேற்று மதங்களுக்குச் சென்றவர்களை தாய் மதம் திரும்பச் செய்தல், பிற சமயத்தவரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான இந்து மத வழிபாட்டு இடங்களை மீட்டல், அங்கே மீண்டும் வழிபாட்டு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட மதம் தொடர்புடைய ஆன்மிகச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வேறு பெயர்களில் கிளைகள் உள்ளன. சுமார் 70 லட்சம் பேர் இந்த அமைப்பில் தீவிர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் இந்த அமைப்பு ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. கிராமக் கோயில்களில் உள்ள பூஜாரிகளை ஒருங்கிணைத்தல், அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தல் உள்ளிட்ட சேவைப் பணிகளைச் செய்து வருகிறது.

இதன் சர்வதேச தலைவராக இருந்து வந்த பிரவீன் பாய் தொகாடியா, அண்மையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இவர் வகித்து  வந்த தலைவர் பதவியில் புதிய நபரை நியமிக்க  நடைபெற்ற ஆலோசனையில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் போனது. இதனால், சுமுகமாக புதிய நபரை நியமனம் செய்யும் வழக்கத்துக்கு மாறாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக குர்கான் நகரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பங்கேற்கும் தகுதிபெற்ற 192 உயர்மட்ட பிரதிநிதிகள் வாக்களித்தனர்.

இதில், இமாச்சலப் பிரதேச மாநில முன்னாள் ஆளுநர் வி.எஸ். கோக்ஜே 131 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராகவா ரெட்டி 60 வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக கோக்ஜே தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories