February 21, 2026, 4:34 PM
30.4 C
Chennai

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மிருகங்கள்: ஆந்திர முதல்வர்

02 May 08 IND - 2026குண்டூர் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொது விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.

ஆந்திராவின் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை தொடர்ந்து, விஜயவாடாவில் பொது விழிப்புணர்வு பேரணி ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.

சிறுமிகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் எனது கவனத்துக்கு வந்ததும், சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி குற்றம் செய்தவரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது மக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இதுபோன்ற குற்றவாளிகளிடம் கருணை காட்ட கூடாது. பெண்கள், குற்றவாளிகள் முகத்தில் காறி துப்ப வேண்டும். அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள், அவர்களை மன்னிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்து, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒரு குழு அமைத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றார்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories