
சென்னை: சென்னை முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று காலை முதலே குவிந்து வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்று, சென்னை சேப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.
சாலையில் அமர்ந்து போராடியவர்களை தூக்கிச் சென்று கைது செய்தனர் போலீஸார். இதனிடையே தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று அதிகாலையிலேயே 5 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், தலைமை செயலகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலையில் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 5000 பேர் கைது செய்யப்பட்டனர்.

