கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கு கோருகிறார் குமாரசாமி

Published:

05 May17 Kumarasaamy - 2026

பெங்களூர்: கர்நாடக முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்ட குமாரசாமி பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கு கோருகிறார். முன்னதாக ஒரே நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வென்று காட்டுவேன் என்று கூறியிருந்தார்.

கர்நாடக மாநில முதல்வராக மஜத.,வின் குமாரசாமி நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று மாலை விதான் சௌதா வளாகத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார்.

இந்தப் பதவியேற்பு விழா நிறைவடைந்த பின்னர் அனைத்து காங்கிரஸ், மஜத., எம்.எல்.ஏக்களும் பாதுகாப்பாக ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். சட்டப் பேரவையில் குமாரசாமி பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வரை எம்.எல்.ஏக்கள் அங்கேயே தங்க வைக்கப் பட்டிருப்பார்கள்.

சட்டப்பேரவை நாளை மதியம் 12.15க்குக் கூடும்போது, குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை கொண்டுவருகிறார். இதன்மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும். பெரும்பான்மைக்கு 112 பேர் ஆதரவு இருந்தால் போதும். காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜத.,வுக்கு 37 இடங்களும் என கூட்டணி அரசின் பலம் 118 ஆக இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக.,வின் பலம் 104.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img