நொய்டா:
தில்லியில் மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தில்லியில் நொய்டா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அமித் சிங் தில்லி காவல் துறையின் சிறப்பு சிறை துறை உதவி ஆணையராக பதவி வகித்து வந்தார். அவரது மனைவி குடியிருப்பு கட்டடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதையடுத்து அமித் சிங் தன் கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுள்ளார். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தம்பதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிங் இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த முடிவை தம்பதி எடுத்ததற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.


