பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் சேர்த்த பாதிரியார்கள்!

church of india - 2026

பாவ மன்னிப்பு கேட்க சர்ச்சுக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் செய்தனர்  பாதிரியார்கள் 5 பேர். செய்தி ஊடகங்களைத் தவிர பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இந்தச் செய்தி.

இப்படிப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தவர் என்ற போர்வையிலும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்தும் வருவதால், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது என்றும் நாட்டுக்கு அவப் பெயரை வலிய ஏற்படுத்தித் தந்து நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் இந்த பாதிரிகள் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்டுவந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து தற்போது தலைமறைவாக உள்ள ஐந்து பாதிரியார்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சு ஒன்றில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரும் தில்லியைச் சேர்ந்த ஒருவரும் பாதிரியார்களாக உள்ளனர்.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “என் மனைவி கேட்ட பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

மேலும் முதல் முறை, பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் குறித்து புகார் அளிக்க முயன்றதால்தான் அடுத்தடுத்து பாதிரியார்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சர்ச் நிர்வாகம் 5 பாதிரியார்களை விடுமுறையில் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரை போலீஸில் புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் தொடர்பான ஆடியோ டேப் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட பாதிரியார்களையும், சர்ச் நிர்வாகியையும் விரைவில் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாகவுள்ள நிர்வாகியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories