பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் சேர்த்த பாதிரியார்கள்!

church of india - 2026

பாவ மன்னிப்பு கேட்க சர்ச்சுக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்து பாவம் செய்தனர்  பாதிரியார்கள் 5 பேர். செய்தி ஊடகங்களைத் தவிர பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இந்தச் செய்தி.

இப்படிப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தவர் என்ற போர்வையிலும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்தும் வருவதால், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது என்றும் நாட்டுக்கு அவப் பெயரை வலிய ஏற்படுத்தித் தந்து நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் இந்த பாதிரிகள் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்டுவந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து தற்போது தலைமறைவாக உள்ள ஐந்து பாதிரியார்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சு ஒன்றில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரும் தில்லியைச் சேர்ந்த ஒருவரும் பாதிரியார்களாக உள்ளனர்.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “என் மனைவி கேட்ட பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் முதல் முறை, பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் குறித்து புகார் அளிக்க முயன்றதால்தான் அடுத்தடுத்து பாதிரியார்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சர்ச் நிர்வாகம் 5 பாதிரியார்களை விடுமுறையில் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரை போலீஸில் புகார் எதுவும் அளிக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் தொடர்பான ஆடியோ டேப் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட பாதிரியார்களையும், சர்ச் நிர்வாகியையும் விரைவில் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாகவுள்ள நிர்வாகியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories