கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை!

Published:

sushma swaraj - 2026

புது தில்லி: நேபாளத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்குச் சென்ற இந்திய யாத்ரீகர்களை மீட்டு அழைத்து வர, மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் நேபாள அரசின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளதாவது…

புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். 525 யாத்ரீகர்கள் சிமிகோட் பகுதியிலும், 550 பேர் ஹில்சா பகுதியிலும், 500 பேர் திபெத் பகுதியிலும் சிக்கியுள்ளனர். #IndiansStrandedInNepal

சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில், இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

சிமிகோட்டில், வயது முதிர்ந்த யாத்ரீகர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஹில்சா பகுதியில் உதவிக்கு போலீசாரின் உதவியை கோரியுள்ளோம். இந்திய யாத்ரீகர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களை வழங்குமாறு நேபாள அரசின் உதவியைக் கோரியுள்ளோம்.

யாத்ரீகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்க்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் உதவிகள் வழங்க ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுகுறித்த எண்களையும் தனது டிவிட்டர் பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் அளித்துள்ளார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img