பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்மணி; குடும்ப பிரச்னையை தீர்ப்பதாகக் கூறி, பலாத்காரம் செய்த பாதிரியார்!

church cross - 2026

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார். அதே ஆலயத்தை சேர்ந்த 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் செய்ததை அடுத்து 4 பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அதே கிறிஸ்துவ சர்ச்சை சேர்ந்த இன்னொரு பாதிரியார் பினுஜார்ஜ் என்பவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப் பட்டுள்ளது. இந்த பாதிரியார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள குடும்பப் பிரச்னை குறித்துக் கூறி, அதை சுமுகமாகத் தீர்த்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

அந்நிலையில், அந்த பாதிரியார் மாவேலிகரைக்கு மாற்றலாகி சென்றதால் அப்பெண்ணை அங்குள்ள சர்ச்சுக்கு வரவழைத்து குடும்பப் பிரச்னையை தீர்க்க ஆலோசனை வழங்குவதாகக் கூறி, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் பி‌ஷப்பிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரம் பாதிரியார் பினு ஜார்ஜ் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததால் காயங்குளம் போலீசில் அந்தப் பெண் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பாதிரியார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் தொடர்ந்து பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருவது, கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல புகார்கள் சர்ச் மட்டத்தில் அமுக்கப்படுவதும், பிஷப்களே கட்டப் பஞ்சாயத்து செய்து, பல புகார்களை வெளிவராமல் தடுத்து சமரசம் செய்து வைப்பதும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories