December 5, 2025, 5:07 PM
27.9 C
Chennai

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்மணி; குடும்ப பிரச்னையை தீர்ப்பதாகக் கூறி, பலாத்காரம் செய்த பாதிரியார்!

church cross - 2025

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற ஒரு பெண்ணை மிரட்டி அந்த பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தார். அதே ஆலயத்தை சேர்ந்த 3 பாதிரியார்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் செய்ததை அடுத்து 4 பாதிரியார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அதே கிறிஸ்துவ சர்ச்சை சேர்ந்த இன்னொரு பாதிரியார் பினுஜார்ஜ் என்பவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப் பட்டுள்ளது. இந்த பாதிரியார் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலப்புழை மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள குடும்பப் பிரச்னை குறித்துக் கூறி, அதை சுமுகமாகத் தீர்த்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

அந்நிலையில், அந்த பாதிரியார் மாவேலிகரைக்கு மாற்றலாகி சென்றதால் அப்பெண்ணை அங்குள்ள சர்ச்சுக்கு வரவழைத்து குடும்பப் பிரச்னையை தீர்க்க ஆலோசனை வழங்குவதாகக் கூறி, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் பி‌ஷப்பிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரம் பாதிரியார் பினு ஜார்ஜ் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததால் காயங்குளம் போலீசில் அந்தப் பெண் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பாதிரியார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் தொடர்ந்து பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருவது, கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல புகார்கள் சர்ச் மட்டத்தில் அமுக்கப்படுவதும், பிஷப்களே கட்டப் பஞ்சாயத்து செய்து, பல புகார்களை வெளிவராமல் தடுத்து சமரசம் செய்து வைப்பதும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories