குழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை!

karnataka bidar man killed whatsapp rumour - 2026

பெங்களூரு: குழந்தை கடத்தல் கும்பல் என வாட்ஸ்அப் மூலம் பரவிய வதந்தியால், பொதுமக்கள் தாக்கியதில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அசாம் என்ற கணினி மென்பொருள் பொறியாளர், தனது நண்பர்கள் நால்வருடன் காரில் சென்றார். அவர்களில் முகமது சலாம் கத்தார் நாட்டை சேர்ந்தவர். வழியில் கர்நாடக மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலமான பிதர் என்ற இடத்தில் காரை நிறுத்தினர். அப்போது முகமது சலாம், அங்கிருந்த குழந்தைகளுக்கு தான் வைத்திருந்த சாக்லேட்களை அளித்தார். இதனைக் கண்ட சிலர், அதனை போட்டோ எடுத்து, குழந்தை கடத்தும் கும்பல் என வாட்ஸ் ஆப் மூலம் செய்தி பரப்பினர்.

இதைக் கண்ட அந்த கிராம மக்கள் அவர்கள் நால்வரிடத்தும் வாக்குவாதம் செய்தனர். கிராம மக்களைக் கண்டு பயந்த அவர்கள் நால்வரும் காரில் ஏறி வேகமாகச் சென்றனர். இருப்பினும் அவர்களை வாகனங்களில் துரத்திய கிராம மக்கள், வழியிலேயே அவர்களை மடக்கி வெளியே இழுத்துப் போட்டு கடுமையாகத் தாக்கினர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கூட்டத்தை கலைத்தனர். அப்போது மொஹம்மத் அசாம் என்பவர் அங்கேயே உயிரிழந்து கிடந்தார். மற்ற மூவரும் படு காயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்ட போலீஸார், உடனே மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 32 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இதே போன்ற சம்பவம்தான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கடந்த மாதம் நடந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் பலியானார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories