குமாரசாமியின் கண்ணீர் நாடகம்..! புரிந்து கொண்ட காங்கிரஸ்..! நாம் புரிந்து கொள்வது எதை..?

kumarasamy karnataka - 2026

கர்நாடக மாநிலத்தில் இப்போதைய ‘ஹாட் டாபிக்’ முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் குறித்த விவாதம்தான்! முதல்வர் பதவியில் அமர்ந்த தொடக்க நாளில் இருந்தே குமாரசாமி எந்தக் கருத்தை, எந்தக் காட்சியை நிலை நிறுத்த ஆசைப் பட்டு நடந்து கொள்கிறாரோ அதையே இப்போதும் தொடர்ந்து செய்கிறார்.

தனக்கு பதவியில் ஆசை இல்லை என்றும், தாம் கட்டாயத்தின் பேரில் பதவியில் அமர்த்தப் பட்டிருப்பதாகவும் ஒரு கருத்தை வலியத் திணிக்க முயற்சி செய்கிறார். தான் முதல்வர் என்றாலும், எல்லாமுமே காங்கிரஸ் கையில் இருக்கிறது என்று மக்களிடம் பரப்பினார். தன்னால் ஆவது எதுவும் இல்லை என்றும், தாம் வெறும் பொம்மைதான் என்றும் நிலை நிறுத்த, மக்களிடம் அனுதாபம் தேட எத்தகைய அரசியல் அரிதாரத்தைப் பூசிக் கொண்டிருக்கிறார் என்பதை கிண்டலடிக்காதவர்கள் கிடையாது.

ஜூலை 14 அன்று ஒரு பாராட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தக் கூட்டத்தில் பேசிய குமாரசாமி, கூட்டணி என்ற பெயரில் தான் விஷத்தைக் குடித்து விட்டதாகவும், பல விஷயங்களில் தான் நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். தான் ஏன் விஷத்தைக் குடித்ததாக அவர் சொல்ல வேண்டும் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது?! அப்படி என்றால் விஷமுறிவுக்காக உடனே கூட்டணியை விட்டுவெளியே வந்துவிடுவாரா அல்லது பதவியை விட்டு விலகுவார்ரா என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது.

வெறும் 37 இடங்களைக் கையில் கொண்டிருந்த குமாரசாமிக்கு, சந்தர்ப்ப வசத்தால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் நாம் சேர்கிறோம், காங்கிரஸார் தம்மை எல்லாவிதத்திலும் நிர்பந்திப்பார்கள் என்பது தெரியாமலா இருந்தது?

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இப்போது காங்கிரஸாரைக் கை காட்டிவிட்டு, எல்லா விதமான முறைகேடுகளையும் குமாரசாமி செய்யமாட்டார் என்பதற்கு எந்த உறுதிப் பத்திரமும் யாரும் தர இயலாது. காரணம், எல்லாவற்றுக்கும் காங்கிரஸை பொறுப்பாக்குவதற்கு குமாரசாமி அடித்தளம் இட்டுவிட்டார். அதே போல், ஒரு முதல்வர் இப்படி கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு, காங்கிரஸும் எல்லா விதங்களிலும் அவருக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பது வெளிப்படையாக உறுதியாகிவிட்டது. இப்படிப்பட்ட ஆட்சி கர்நாடகாவில் தொடரத்தான் வேண்டுமா என்பதை மக்களாகிய நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!

கூட்டணி என்றா விஷம் அருந்திய குமாரசாமிக்கு காங்கிரஸ் சார்பில் சமாதானம் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸுக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் குமாரசாமிக்கு ஆறுதல் கூறுகிறார். மதசார்பற்ற பலரும் குமாரசாமிக்கு ஆதரவு கொடுக்கின்றனராம். இந்த மத சார்பற்ற தன்மையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, குமாரசாமி வலம் வர வேண்டுமாம். அந்த ஒன்றுக்காகவே காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துள்ளதாம். மதசார்புள்ள கட்சிகளின் ஆதரவாளர்கள் பேசுவதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் இருந்தாலே போதும், நீங்கள் சரியாகிவிடுவீர்கள் என்று கூறியிருக்கிறார் கார்கே!

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இன்னும் எத்தனை காலத்துக்கு மதசார்பற்ற என்ற பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டு காங்கிரஸார் கொள்ளை அடிப்பார்கள் என்பது காங்கிரஸாருக்கே வெளிச்சம்!

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுதாகர் கூறியபோது, குமாரசாமி சொல்வது போன்று, காங்கிரஸ் விஷத்தை அல்ல, அமிர்தத்தையே அவருக்குக் கொடுத்துள்ளது. வெறும் 27 இடங்களில் வென்றவருக்கு முதல்வர் பதவியையே கொடுத்துள்ளது காங்கிரஸ். எனவே குமாரசாமி தைரியமாக பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். குமாரசாமி கண்ணீர் விடுவதற்கு பதிலாக, சாமானிய மனிதர்களின் கண்ணீரைத் துடைக்க முயற்சி செய்ய வேண்டும்.. என்று கூறியுள்ளார்.

இப்படியாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைப் போல் ஓர் அழுகுனி ஆட்டத்தை ஆடி வருகிறார் குமாரசாமி. இப்படி ஓர் ஆட்டத்தை ஆடுவதற்கான அரிய யோசனையை கேஜ்ரிவாலே கூட சொல்லிக் கொடுத்திருக்கலாம்! ஆட்டத்தை தொடங்கியாயிற்று! இன்னும் காட்சிகள் அதிகம் காண வேண்டியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories