February 22, 2026, 8:42 PM
27.3 C
Chennai

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

supreme-court-India புது தில்லி: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், வாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், எதிர்த் தரப்பினரின் வாதம் முடிவடைந்த நிலையில், அரசுத் தரப்பு வாதத்தை வழக்குரைஞர் பவானி சிங் வெள்ளிக்கிழமை தொடர்ந்தார். இந்த நிலையில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங், எதிர்த் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அவரை அரசுத் தரப்பு வழக்குரைஞர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அன்பழகன் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. சுமார் 2.30 மணி நேரம் இந்த வழக்கு விசாரணையின் வாதம் நீடித்தது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான் பாலிநாரிமன் பல நிலைகளில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுள்ளது, இந்த வழக்கின் முழு விவரமும் தெரிந்தவர் பவானி சிங். எனவே, அவர் வழக்கின் விசாரணையில் ஆஜராவதில் தவறில்லை என்று கூறினார். இருப்பினும், மேல்முறையீட்டுக்கு செல்ல வழிமுறைகள் இல்லை, மத்திய அரசின் அனுமதி தேவை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்தார். கர்நாடக அரசுத் தரப்பில் எம்.என்.ராவ், இந்த வழக்கில் கர்நாடக அரசு பவானி சிங்கை நியமிக்கவில்லை, கர்நாடக அரசே இதை எதிர்க்கிறது என்று கூறினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழகின் தீர்ப்பினை வைத்தே, அரசுத் தரப்பு வழக்கில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் மட்டுமே ஆஜராக முடியுமா அல்லது, அது தொடர்பான அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜராக முடியுமா என்ற நுட்பமான விவரம் தெரியவரும். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பை தொடர்ந்தே, கர்நாடக உயர் நீதிமன்றமும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை அறிவிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories