February 20, 2026, 4:46 AM
25.4 C
Chennai

24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்!

krs dam - 2026

24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது

கர்நாடகாவிலும் கேரளாவிலும் தொடர்ந்து கன‌ மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பி வழிந்தன.

கர்நாடக அணைக‌ளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப் ப‌ட்டதால், மேட்டூர் அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்து வருகிறது. இதே போல கேரள மாநிலம் வய நாட்டில் இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்த தால், நிகழாண்டில் இரண்டாம் முறையாக இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. காவிரி, கபினி ஆகிய இரு ஆறுகளிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் நிரம்பி வழிகின்றன.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அனைத்து மதகுகள் வழியாகவும் நீரை வெளியேற்றி வருகின்றனர். காவிரி கரையோரமுள்ள 50-க்கும் மேற்பட்டுள்ள கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கே.ஆர்.எஸ் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அதிகமாக வந்துகொண்டு உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 87,464 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது

இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. அதே போல் கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் 40,380 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் 1,40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.

கே.ஆர்.எஸ் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் தேசிய பேரிடர் மீட்புக் குழு உதவியை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories