December 5, 2025, 3:13 PM
27.9 C
Chennai

24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்!

krs dam - 2025

24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது

கர்நாடகாவிலும் கேரளாவிலும் தொடர்ந்து கன‌ மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பி வழிந்தன.

கர்நாடக அணைக‌ளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப் ப‌ட்டதால், மேட்டூர் அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்து வருகிறது. இதே போல கேரள மாநிலம் வய நாட்டில் இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்த தால், நிகழாண்டில் இரண்டாம் முறையாக இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. காவிரி, கபினி ஆகிய இரு ஆறுகளிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் நிரம்பி வழிகின்றன.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அனைத்து மதகுகள் வழியாகவும் நீரை வெளியேற்றி வருகின்றனர். காவிரி கரையோரமுள்ள 50-க்கும் மேற்பட்டுள்ள கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கே.ஆர்.எஸ் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தொடர்ந்து அதிகமாக வந்துகொண்டு உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 87,464 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது

இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. அதே போல் கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் 40,380 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் 1,40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.

கே.ஆர்.எஸ் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் தேசிய பேரிடர் மீட்புக் குழு உதவியை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories