December 5, 2025, 1:46 PM
26.9 C
Chennai

தாடிக்கொம்பு சௌந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் 3 உண்டியல்கள் திருட்டு!

dindukkal thadikkombu temple - 2025

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இங்கே 3 உண்டியல்களில் திருட்டு நடைபெற்றுள்ளது என்று விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் கூறியுள்ளனர்.

திண்டுக்கல்லை அடுத்துள்ளது தாடிக்கொம்பு. இங்கே நூறு வருடங்களுக்கு மேல் பழைமையான சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழக அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும்.

சௌந்தரராஜ பொருமாள் கோவில், ஆஞ்சநேயர், சௌந்தரவல்லி, தன்வந்திரி, காலபைரவர் உட்பட 10க்கும் மேற்பட்ட சந்நிதிகள் இந்தக் கோயிலில் உள்ளன. நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

கோவிலைச் சுற்றி 30 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் உள்ளது. பாதுகாப்பிற்காக கோவில் பிராகாரங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் பாதுகாப்புக்கென்று இரவு பணி பாதுகாவலர்கள் இரண்டு பேர் உள்ளனர்.

இக்கோவிலில் உள்ள சந்நிதிகள் முன்பாக மொத்தம் 19 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று (14.08.18) காலை கோவில் காவலர்கள் கோவிலைத் திறந்து சுற்றி வந்தபோது தன்வந்திரிப் பெருமாள், லட்சுமி நரசிம்மப் பெருமாள் மற்றும் ஆண்டாள் ஆகிய சந்நிதிகள் முன்பாக வைக்கப்பட்டிருந்த 3 ஆளுயர எவர்சில்வர் உண்டியல்கள் மாயமானதைக் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து இக்கோவிலின் செயல் அலுவலர் பொறுப்பு கணபதி முருகனிடம் உண்டியல் மாயமானது குறித்து தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் செயல்அலுவலர் கணபதி முருகன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தாடிகொம்பு அருகே உள்ள குடகனாற்றின் கரையோரத்தில் முட்புதரில் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 3 உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது.

கோவிலில் உள்ள சிசிடிவி மேராவை போலீசார் ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த 3 பேர் கோவிலில் இருந்து உண்டியலைத் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. கடந்த 7ஆம் தேதியன்று அறிநிலையத்துறை அதிகாரிகள் கோவிலில் உள்ள 19 உண்டியல்களிலும் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்திய பணம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். எனவே  திருடு போன 3 உண்டியல்களில் பெருமளவு பணம் இருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர்.

பழைமையான சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் உண்டியல்கள் கொள்ளை போனது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories