அரசியல் கட்சிகள் இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம்: தேர்தல் கமி‌ஷன்

Published:

403 Sep05 Loud speeker - 2026

பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலின் போது ஒலி பெருக்கியை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது.

இரவு 10 மணிவரை ஒலி பெருக்கி பிரசாரம் செய்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்து இருந்தது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குறிப்பாக இரவு 10 மணிவரை ஒலிபெருக்கி பிரசாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

டெல்லியில் நடந்த தேர்தல் கமி‌ஷன் ஆலோசனைக் கூட்டத்திலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை பல நேரத்தில் வலியுறுத்தினர்.

இதுபற்றி தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி பரிசீலித்து வந்தனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் கோரிக்கையை எற்று ஒலிபெருக்கி பிரசார நேரத்தை அதிகரித்து அனுமதி அளித்துள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இதுபற்றி டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் பரிசீலித்து ஒலிபெருக்கி பிரசார கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம் என்று அனுமதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்தது. முந்தைய உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்றார்.

Related articles

Recent articles

spot_img