அரசியல் கட்சிகள் இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம்: தேர்தல் கமி‌ஷன்

403 Sep05 Loud speeker - 2026

பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலின் போது ஒலி பெருக்கியை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது.

இரவு 10 மணிவரை ஒலி பெருக்கி பிரசாரம் செய்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்து இருந்தது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குறிப்பாக இரவு 10 மணிவரை ஒலிபெருக்கி பிரசாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

டெல்லியில் நடந்த தேர்தல் கமி‌ஷன் ஆலோசனைக் கூட்டத்திலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை பல நேரத்தில் வலியுறுத்தினர்.

இதுபற்றி தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி பரிசீலித்து வந்தனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் கோரிக்கையை எற்று ஒலிபெருக்கி பிரசார நேரத்தை அதிகரித்து அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றி டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் பரிசீலித்து ஒலிபெருக்கி பிரசார கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம் என்று அனுமதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்தது. முந்தைய உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories