புது தில்லி: ஊடகங்களால் கடவுள் ஆனவர் தோனி. அவருக்கு ஒரு நாள் முடிவு வரும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங்குக்கு இடம் கிடைக்காமல் போனது. இதற்கு கேப்டன் தோனியே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார் யோக்ராஜ் சிங். இந்நிலையில் அவர் ஹிந்தி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் … தோனி ஒன்றுமில்லாதவர். ஊடகங்கள் தான் அவரை கிரிக்கெட்டின் கடவுள் போல் சித்திரித்து இருக்கிறார்கள். ஊடகங்கள்தான் அவரை மிகப்பெரிய வீரராக ஊதிப் பெரிதாக்கியுள்ளன. ஆனால் அத்தகைய பெருமைக்கு தோனி தகுதியானவர் இல்லை. அவர் ஒன்றுமே இல்லாதவராக இருந்த காலங்கள் இருந்தன. ஆனால் தற்போது அவர் தன்னை வளர்த்த ஊடகங்களையே கிண்டல் செய்கிறார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஊடகங்களையும், அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் கைதட்டும் ரசிகர்களையும் கேலி செய்கிறார். உண்மையில் நான் நிருபராக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே தோனியை அடித்திருப்பேன். தோனி கர்வம் பிடித்தவர். ராவணனின் கர்வம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது போல் தோனிக்கும் ஒருநாள் வரும். ராவணனுக்கும் மேலாக தோனி தன்னை நினைத்துக் கொண்டுள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்கள் தோனியைப் பற்றி என்னிடம் கூறும் போது அவமானமாக உள்ளது. தோனியைக் குறை சொல்பவர்கள் அவர் மீதான பொறாமை காரணமாக சொல்கிறார்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர்கள் தோனி குறித்து கூறுவதைப் பார்த்தால் அவரைப் போன்ற மனிதரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் 4 ஆவது வீரராகக் களம் இறங்கத் தயாராக இருந்தார். ஆனால் தோனி அவரை நிறுத்திவிட்டு, தான் களம் கண்டு பெரிய ஹீரோவானார். அப்போது அவர் ஏன் முன்கூட்டியே களம் இறங்க வேண்டும்? தன்னை பெரிய வீரராகக் கருதும் தோனி இந்த உலகக் கோப்பை போட்டி அரை இறுதியில் 4 ஆவது வீரராகக் களம் இறங்காதது ஏன்? -என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தன் தந்தையின் கருத்துக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
மதுரை
போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!
ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!
அரசியல்
வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!
வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...
News
Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!
It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
மதுரை
போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!
ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!
அரசியல்
வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!
வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...
News
Front-Row Seats in the Living Room: Reimagining Margazhi for the Rasika at Home!
It is that time of the year again. The Magical Margazhi Music Season has descended upon Chennai, a city whose December air is thick with raga, rhythm, and reverence.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!
கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று
நிகழ்ச்சிகள்
சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!
எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.
தமிழகம்
அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!
இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...
Entertainment News
Previous article
Next article

