February 23, 2026, 6:59 PM
29 C
Chennai

ஊடகங்களால் கடவுள் ஆன தோனியின் கர்வத்துக்கு ஒரு நாள் முடிவு வரும்: யுவராஜ் தந்தை

புது தில்லி: ஊடகங்களால் கடவுள் ஆனவர் தோனி. அவருக்கு ஒரு நாள் முடிவு வரும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். அண்மையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங்குக்கு இடம் கிடைக்காமல் போனது. இதற்கு கேப்டன் தோனியே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார் யோக்ராஜ் சிங். இந்நிலையில் அவர் ஹிந்தி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் … தோனி ஒன்றுமில்லாதவர். ஊடகங்கள் தான் அவரை கிரிக்கெட்டின் கடவுள் போல் சித்திரித்து இருக்கிறார்கள். ஊடகங்கள்தான் அவரை மிகப்பெரிய வீரராக ஊதிப் பெரிதாக்கியுள்ளன. ஆனால் அத்தகைய பெருமைக்கு தோனி தகுதியானவர் இல்லை. அவர் ஒன்றுமே இல்லாதவராக இருந்த காலங்கள் இருந்தன. ஆனால் தற்போது அவர் தன்னை வளர்த்த ஊடகங்களையே கிண்டல் செய்கிறார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஊடகங்களையும், அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் கைதட்டும் ரசிகர்களையும் கேலி செய்கிறார். உண்மையில் நான் நிருபராக இருந்திருந்தால் அந்த இடத்திலேயே தோனியை அடித்திருப்பேன். தோனி கர்வம் பிடித்தவர். ராவணனின் கர்வம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது போல் தோனிக்கும் ஒருநாள் வரும். ராவணனுக்கும் மேலாக தோனி தன்னை நினைத்துக் கொண்டுள்ளார். மற்ற கிரிக்கெட் வீரர்கள் தோனியைப் பற்றி என்னிடம் கூறும் போது அவமானமாக உள்ளது. தோனியைக் குறை சொல்பவர்கள் அவர் மீதான பொறாமை காரணமாக சொல்கிறார்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர்கள் தோனி குறித்து கூறுவதைப் பார்த்தால் அவரைப் போன்ற மனிதரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் 4 ஆவது வீரராகக் களம் இறங்கத் தயாராக இருந்தார். ஆனால் தோனி அவரை நிறுத்திவிட்டு, தான் களம் கண்டு பெரிய ஹீரோவானார். அப்போது அவர் ஏன் முன்கூட்டியே களம் இறங்க வேண்டும்? தன்னை பெரிய வீரராகக் கருதும் தோனி இந்த உலகக் கோப்பை போட்டி அரை இறுதியில் 4 ஆவது வீரராகக் களம் இறங்காதது ஏன்? -என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தன் தந்தையின் கருத்துக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories