December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

எஸ்சி.,/எஸ்டி., வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கோரி 51 ஆயிரம் பிராமணர்கள் போராட்டம்!

scstactmp - 2025

உஜ்ஜயினி: எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பில், மீண்டும் ஒரு போராட்டம் தலை தூக்கியிருக்கிறது. மத்திய பிரதேசம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை 51 ஆயிரம் பிராமணர்கள் ஒன்று திரண்டு ஆளும் பாஜக.,வுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். ஜப் ஜப் ப்ராஹ்மன் போலா ஹை, ராஜ் சிங்காசன் தோலா ஹை (எப்போது பிராமணர் குரலை உயர்த்துகிறாரோ அப்போது சிம்மாசனங்கள் வீழ்ந்திருக்கின்றன) என்ற முழக்கங்கள் இந்தப் போராட்டத்தின் போது எழுப்பப் பட்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப் பட்டுள்ளது. எஸ்சி., எஸ்டி.,யினரைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி ஒருவரைக் கைது செய்வதற்கு முன்னர், தகுந்த ஆதாரங்களும் விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரியும், சாதி வாரி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட எஸ்சி எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவரக் கோரியும், பிராமணர்கள் நல வாரியம் அமைக்கவும், அனைத்து மாநிலங்களிலும் உயர் வகுப்பினருக்கென ஒரு பிரத்யேக பல்கலைக் கழகம் அமைக்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் 51 ஆயிரம் பிராமணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

scstactinmp chauhan - 2025

இந்தப் போராட்டத்தில் பெண்கள் சிலர் பரசுராமரின் ஆயுதமான கோடலியைக் கையில் வைத்திருந்தனர். தசரா மைதானத்தில் கூடியவர்கள், பாரதிய பிராமண மஹாசங்கம் என்ற பேனரில் ஆளும் பாஜக.,வுக்கு கடும் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளனர். பணிஉயர்வுகளில் சாதிய இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

வரும் தேர்தலில் ஒரு கண் வைக்கப் போகிறோம்; பாஜக., காங்கிரஸ் இரண்டுமே எங்களை வஞ்சித்து வருகின்றன; உயர் வகுப்பினருக்கு கறுப்புச் சட்டத்தைப் போடுவதால் நாங்கள் பாஜக.,வையும் விரும்பவில்லை, காங்கிரஸையும் விரும்பவில்லை என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் மகாமண்டலேஷ்வர் அதுலானந் சரஸ்வதி.

கமல் கிஷோர் நாகர் என்பவர் பேசியபோது, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். இன்னும் இரு மாதங்களில் பாஜக.,வும் காங்கிரஸும் பிச்சை எடுக்க நம்மிடம் வருவார்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், உஜ்ஜயினி பாஜக., எம்பி சிந்தாமன் மால்வியாம் உஜ்ஜயினி தெற்கு எம்.எல்.ஏ., மோஹன் யாதவ் ஆகியோரின் உருவபொம்மையை எரித்தனர்.

முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இப்போது இரு தரப்புக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories