பாலியல் புகார்… மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா!: தேசிய விருதுகளை திருப்பி அளிப்பாரா வைரமுத்து?

mj akbar me too - 2026

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள வைரமுத்து, தாம் வாங்கிய தேசிய விருதுகளை திருப்பி அளிப்பாரா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

இணைய தளத்தில் தற்போது பிரபலமாகி வரும் #மீடூ இயக்கம் மூலம் ஏராளமான பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து தங்களது இளமைக்கால அனுபவங்களை, தாங்கள் சந்தித்து வரும் துயரங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கெனவே பத்திரிக்கை ஆசிரியராக இருந்து, தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள எம்.ஜே.அக்பர் மீதும் ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்தனர். எம்.ஜே.அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது, தங்களை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தியதாக #மீடூ மூலம் வெளிப்படுத்தினர். இதனால் இது அரசியல் ரீதியில் பிரச்னையாக உருவெடுத்தது.

எம்.ஜே.அக்பர் மீது கூறப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த எம்.ஜே.அக்பர், இன்று காலை நாடு திரும்பினார். அவரிடம் செய்தியாளர்கள் பாலியல் புகார் குறித்து கேட்டனர். அப்போது அது தொடர்பாக பின்னர் அறிக்கை வெளியிடுவதாகக் கூறினார்.

பின்னர் அவர், தனது வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. எம்.ஜே.அக்பர் தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

sddefault 19 - 2026

இந்நிலையில், தமிழகத்தில் திமுக., சார்பு அரசியல் செல்வாக்குள்ள கவிஞர் வைரமுத்து, பலரையும் மிரட்டி பாலியல் சீண்டல் செய்ததாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. பாடகி சின்மயி தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பின்னர், வரிசையாக இத்தகைய குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீது முன்வைக்கப் படுகின்றன. தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் பலரும் இவ்வாறு டிவிட்டர் வலைத்தளம் மூலம் #மீடூ இயக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதை அடுத்து தன் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு தெரிவிக்கப் படுவதாகவும், தன் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் வைரமுத்து இன்று ஒரு வீடியோ பதிவில் கூறியுள்ளார். மேலும், இது குறித்து கடந்த ஒரு வார காலமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்ததாகவும், தேவையான ஆவணங்களைத் தொகுத்து வைத்துள்ளதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.

இதனிடையே, வைரமுத்து தனது தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பரவலாக கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. சமூக வலைத்தளங்களில், வைரமுத்து தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என்பது உண்மையானால், அவற்றை நிரூபித்துவிட்டு, அதன் பின்னர் தேசிய விருதுகளை ஏற்றுக் கொள்ளட்டும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories