பாலியல் புகார்… மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா!: தேசிய விருதுகளை திருப்பி அளிப்பாரா வைரமுத்து?

mj akbar me too - 2026

பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள வைரமுத்து, தாம் வாங்கிய தேசிய விருதுகளை திருப்பி அளிப்பாரா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

இணைய தளத்தில் தற்போது பிரபலமாகி வரும் #மீடூ இயக்கம் மூலம் ஏராளமான பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து தங்களது இளமைக்கால அனுபவங்களை, தாங்கள் சந்தித்து வரும் துயரங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கெனவே பத்திரிக்கை ஆசிரியராக இருந்து, தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள எம்.ஜே.அக்பர் மீதும் ஏராளமான பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்தனர். எம்.ஜே.அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது, தங்களை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தியதாக #மீடூ மூலம் வெளிப்படுத்தினர். இதனால் இது அரசியல் ரீதியில் பிரச்னையாக உருவெடுத்தது.

எம்.ஜே.அக்பர் மீது கூறப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த எம்.ஜே.அக்பர், இன்று காலை நாடு திரும்பினார். அவரிடம் செய்தியாளர்கள் பாலியல் புகார் குறித்து கேட்டனர். அப்போது அது தொடர்பாக பின்னர் அறிக்கை வெளியிடுவதாகக் கூறினார்.

பின்னர் அவர், தனது வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. எம்.ஜே.அக்பர் தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

sddefault 19 - 2026

இந்நிலையில், தமிழகத்தில் திமுக., சார்பு அரசியல் செல்வாக்குள்ள கவிஞர் வைரமுத்து, பலரையும் மிரட்டி பாலியல் சீண்டல் செய்ததாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. பாடகி சின்மயி தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பின்னர், வரிசையாக இத்தகைய குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீது முன்வைக்கப் படுகின்றன. தங்கள் பெயரைக் குறிப்பிடாமல் பலரும் இவ்வாறு டிவிட்டர் வலைத்தளம் மூலம் #மீடூ இயக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதை அடுத்து தன் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு தெரிவிக்கப் படுவதாகவும், தன் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் வைரமுத்து இன்று ஒரு வீடியோ பதிவில் கூறியுள்ளார். மேலும், இது குறித்து கடந்த ஒரு வார காலமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்ததாகவும், தேவையான ஆவணங்களைத் தொகுத்து வைத்துள்ளதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.

இதனிடையே, வைரமுத்து தனது தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பரவலாக கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. சமூக வலைத்தளங்களில், வைரமுத்து தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என்பது உண்மையானால், அவற்றை நிரூபித்துவிட்டு, அதன் பின்னர் தேசிய விருதுகளை ஏற்றுக் கொள்ளட்டும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories