மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 58 ஆகக் குறைக்கப் படாது

Published:

புது தில்லி: 

மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 ஆகக் குறைக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படுமா என மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலக விவகார இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியபோது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உள்ளது. பெரும்பாலான துறைகளில் இதுதான் கடைபிடிக்கப்படுகிறது. எனினும், ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வு வயது மட்டும் 62 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்கவோ அல்லது 33 ஆண்டுகள் சேவை என்பதை குறைக்கும் எண்ணமோ மத்திய அரசிடம் இல்லை என்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img