நவம்பர் 16: தேசிய பத்திரிக்கை தினம்

Published:

01 Nov16 Dhin Press concil day - 2026

நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சுதந்திரமான மற்றும் பொறுப்புடைய பத்திரிக்கைத் துறையை அடையாளப்படுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிமுறைப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India) செயல்படத் தொடங்கிய நாளான நவம்பர் 16-ல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா முதலில் 1966-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 4-ஆம் தேதி நிறுவப்பட்டது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவானது இந்திய பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-ன் (press council Act 1978) கீழ் உருவாக்கப்பட்ட ஓர் தன்னதிகாரமுடைய, சட்ட மற்றும் பகுதி – நீதி அமைப்பாகும்.

இருப்பினும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான J.R. முதோல்கரை தலைவராகக் கொண்டு 1996, நவம்பர் 16-ஆம் தேதிதான் இந்த அமைப்பு செயல்படத் துவங்கியது.

இது, இந்தியாவிலுள்ள அச்சு ஊடகங்கள் உயர்தர நிலைகளைப் பேணுகின்றனவா என உறுதி செய்யவும், அவை புற செல்வாக்கு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆட்படாமல் செயல்படுகின்றனவா என கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img