கரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு!

Published:

gaja-cyclone

நாகப்பட்டினம் வேதாரண்யம் இடையே கஜா புயல் நள்ளிரவு முழுமையாகக் கரையைக் கடந்து விட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலால் மரங்கள் வேரோடு சரிந்தன. மின்கம்பங்களில் மரங்கள் விழுந்ததால், சாலைகளில் அவை சாய்ந்து கிடந்தன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன.

நவ.6 ஆம் தேதி தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அந்தமானுக்கு நகர்ந்தது. அது 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆகி, படிப்படியாக வலுப்பெற்று நவ.9 ஆம் தேதி புயல் சின்னமாக உருப் பெற்றது. இந்தப் புயலுக்கு இலங்கை அளித்த கஜா என்ற பெயர் சூட்டப்பட்டது.

கஜா புயல் வியாழன் நள்ளிரவு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, வேதாரண்யம் – நாகப் பட்டினம் இடையே நள்ளிரவு 12 மணிக்கு கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 100 முதல் 110 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசியது.

நள்ளிரவு 2:30 மணி அளவில் வானிலை ஆய்வு மையம் கஜா புயல் குறித்து தெரிவித்த போது, கஜா புயல் முழுமையாக கரையைக் கடந்துவிட்டது என்று கூறியது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. அவற்றை அப்புறப் படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img