சபரிமலையில் குறைந்து வரும் வருமானம் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கவலை

sabarimala - 2026

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த முறை மிகப் பெரும் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சபரிமலையில் குறைந்து வரும் வருமானம் அதற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டைச் சேர்ந்த கோயில்களில், 2017-18 ஆம் நிதி ஆண்டில் வருவாய் ரூ682 கோடியாக இருந்தது. அதில் ஓய்வூதியம் உள்பட செலவினங்கள் ரூ.677 கோடியாக இருந்தது.

தற்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு சபரிமலை வருமானம் குறைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த வருடம் நடை திறக்கப்பட்டது முதல் ஆறு நாள்களில் கடந்த வருட வருமானத்தை ஒப்பிடும்போது ரூ.14.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தேவசம் போர்டு கூறியுள்ளது

ஒவ்வொரு மாதமும் செலவினங்கள் போக ஓய்வுபெற்ற ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் கடந்த 4 மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதன்மூலம் சபரிமலை விவகாரம் தொடங்கிய காலத்திலிருந்து நிதிச் சிக்கல் அதிகரித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்குவதில் கூட சிக்கலை சந்தித்து உள்ளது. ஓய்வூதியத்துக்கான நிதி இருக்கின்ற சூழ்நிலையில் ஓய்வூதியதாரர்களை அது பெரிதும் பாதிக்காது; ஆனால் வருங்காலத்தில் மிகப் பெரும் சிக்கலை சந்திக்க நேரலாம்!

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப் பாட்டில்,  மொத்தம் 1253 கோவில்கள் உள்ளன. இந்த 1253 கோவில்களில் 60 முதல் 64 கோவில்களே வருவாய் ஈட்டித்தரும் கோயில்களாக இருக்கின்றன

கடந்த வருடம் சபரிமலையில் 330.43 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும் இதில் 75 கோடி ரூபாய் அளவுக்கு சபரிமலையில் வசதிகளுக்காக செலவு செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது! மீதமுள்ள நிதி வருவாய் இல்லாத கோயில் களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாம்.

மேலும் சபரிமலை சீசனின் போது பெரும்பாலான தொகை கேரள நீர் வாரியத்துக்கும் மின்சார வாரியத்துக்கும் செலவிடப்படுகிறது. நீர் வாரியத்துக்கு மட்டுமே கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளது! மேலும்  அரசு ஊழியர்களின் தங்குமிடம் உணவு ஆகியவற்றுக்கு அதிக செலவு செய்யப்படுகிறது. இதனால் அரவணை பிரசாதம் தயாரிப்பது மிகவும் அதிக செலவினம் பிடிப்பதாக ஆகிவிட்டது

பணியாளர்களுக்கான ஊதியம் மட்டுமே 30 கோடியைத் தாண்டுகிறது. தற்காலிக பணியாளர்கள் உள்பட 5250 பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் சேர்த்து 65 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

4665 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களில் கோயில் பணியாளர்கள் 3,200 பேர்! மற்ற பணியாளர்கள் 1465 பேர்! இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியத்துக்கு மட்டும் 105 கோடி ரூபாய் தேவைப்படுகிறது

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்போது வருமானமும் அதில் குறைகிறது. இது மற்ற கோவில்களுக்கும் பொருந்தும். சபரிமலையை ஒட்டி மற்ற கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைவதால் வருமானத்தில் இழப்பு ஏற்படுகிறது

போக்குவரத்து மற்றும் மற்ற சேவைகளுக்கு முன் பதிவு செய்திருந்தவர்கள் அவற்றை கேன்சல் செய்யும்போது அவற்றாலும் இழப்பு அதிகரிக்கிறது இது அரசு போக்குவரத்து கழகத்துக்கான வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது

ஆனால் வருவாய் இழப்பு அதிகரிப்பது எந்த வகையிலும் ஓய்வூதியதாரர்களை உடனடியாக பாதிக்காது; ஓய்வூதியத்திற்கு என ஃபிக்ஸட் டெபாசிட் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை! எதிர்கொள்ளும் சவால்கள் நிச்சயம் சரி செய்யப்படும். எனவே இதில் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று கேரள தேவசம் ரெக்ருமெண்ட் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories