பாலாசோர் : அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும், அக்னி – 5 ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது.,
ஒடிசா மாநிலம் பாலாசோர் கடற்கரை அருகே, திங்கள் இன்று வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது. 56 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட இந்த இந்த ஏவுகணை மூன்று நிலைகளாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கவல்லது.
அக்னி – 5 ஏவுகணை, 1.5 டன் அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லக் கூடியது என்பதும், 5,000 கி.மீ., தொலைவுக்கு பாய்ந்து சென்று இலக்கைத் தக்க வல்லது என்பதும் குறிப்பிடத் தக்க அம்சங்கள்.