December 19, 2025, 5:32 PM
28.5 C
Chennai

சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்: உத்தரவிட்டது எழும்பூர்; ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

sasikala - 2025

சென்னை: சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம ரத்து செய்தது.

ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில், சசிகலா, பாஸ்கரன் ஆகியோர், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் கடந்த வருடம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெங்களூரு சிறையில்அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜர்படுத்தி குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.

ஆனால், ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்பட வில்லை என்பதால் மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக நவ.30 ஆம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அன்றைய தினம் சசிகலா ஆஜராகவில்லை என்பதால், வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப் பட்டது. மீண்டும் நடந்த விசாரணையின் போது, பாஸ்கரன் மட்டும் ஆஜரானார்.

அப்போது சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை நேரில் ஆஜர்படுத்த இயலவில்லை என பெங்களூரு சிறை நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி அந்த வழக்கை வரும் டிச.13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்று சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் சசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். மேலும் பெங்களூரு சிறையில் இருந்து, ‘வீடியோ கான்பிரன்ஸ்’ மூலம் ஆஜராக உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

Topics

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

The Silent Sanctum: Celestial Tears for a Silent Season

" Together, they watch the dark December clouds, wondering if their immortality is being preserved in a digital tomb—vast, accessible, and heartbreakingly cold.

பஞ்சாங்கம் டிச.19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல யாரையும் அனுமதிக்கூடாது: புகார் மனு!

மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில், இருப்பதால் மலைமீது செல்லவோ எந்த நிகழ்வும் நடத்தவோ அனுமதிக்க கூடாது என இந்து அமைப்புகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories