50 நாட்கள் விரதமிருந்து வந்தோம்… நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் மனவேதனை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

sabarimala devottees - 2026

50 நாட்கள் கடும் விரதம் இருந்து நாங்கள் சபரிமலை ஐயனை காண்பதற்காக வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்யும் வசதிகளையும் செய்து கொடுக்காமல் போலீசார் யாரோ இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சபரிமலையை நாசப் படுத்தியுள்ளனர். இதனால் எங்கள் தரிசனம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது

இன்று காலை அடைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்! எங்களுக்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்!

எத்தனை நாள் விரதம் இருந்து வந்திருக்கிறோம். நெய் திரட்டி, பாதுகாப்பாக மூடி, தேங்காய்களை எடுத்துவந்து, ஐயனின் அபிஷேகத்தைக் காண்பதற்காக வந்திருக்கிறோம். எத்தனை நாள் கடின விரதம் இருந்து வந்தோம். எங்களுக்கு இந்த அரசு அளித்துள்ள பதிலடி இதுதான்!

நாங்கள் சபரிமலை ஐயனுக்காக உயிரையும் கொடுப்போம் என்று ஐயப்ப பக்தர்கள் மனம் கதறி அழுதனர்.

இன்று அதி காலை முதலே நிலக்கல்லில் இருந்து பம்பையில் இருந்தும் பக்தர்கள் பல மணி நேரம் கால்கடுக்க நடந்து வந்தும், வரிசையில் நின்றும் வந்திருக்கிறார்கள். சபரிமலை ஐயனைக் காண்பதற்காக வரிசையில் நின்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இருக்கின்றனர்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு பெண்களை நுழைய வைத்து சபரிமலை ஆசாரத்தை அரசு இதன் மூலம் கெடுத்துள்ளது.

சபரிமலை நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் சந்நிதிதானத்தில் இருந்து திருப்பி அனுப்பப் படுகின்றனர். பக்தர்கள் சபரிமலை தரிசனம் செய்ய இயலவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

Related articles

Recent articles

spot_img