கம்யூனிஸ்ட்களின் கல்வீச்சால் பந்தளத்தில் உயிரிழந்த பக்தர்! இந்து அமைப்பினர் மீது தொடரும் தாக்குதலால் பதற்றம்!

IMG 20190103 135111 - 2026

கம்யூனிஸ்ட்களின் கல்வீச்சால் பந்தளத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்து அமைப்பினர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கங்கே தாக்குதல் தொடுத்ததால், இரு தரப்பும் மாறி மாறி கல்வீச்சிலும் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சபரிமலையில் இரு பெண்கள் கேரள அரசால் வலுக்கட்டாயமாக அழைத்துவரப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கம்யூனிஸ்ட்களின் கல்எறிதல் தாக்குதலால் கொலை செய்யப் பட்டுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில், இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சபரிமலைக்குள் பெண்கள் இருவர் நுழைந்தார்கள் என்று தகவல் வெளியானதும், அதனை முதல்வர் பிணராயி விஜயன் உறுதி படுத்தி தகவல் வெளியிட்டதும், நேற்று மாலையிலேயே போராட்டங்கள் தொடங்கி விட்டன.

திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்னர் போராட்டம் நடத்தப் பட்டது. டயர்கள் எரிக்கப் பட்டன. முதல்வர் பிணராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.

இந்நிலையில், பம்பை அருகே பந்தளம் பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பாஜக., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் உருவானது! இந்த மோதலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்! இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கிக் கொண்டனர். இந்தக் கலவரத்தில் சபரிமலை கர்ம சமிதியைச் சேர்ந்த சந்திரன் உண்ணி என்பவர் கல்வீச்சில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயது நிரம்பிய சந்திரன் உண்ணி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தக் கலவரத்திற்கு காரணம் என்று பாஜக.,வினர் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் சந்திரன் உண்ணியை கொன்றதாக பாஜக.,வினர் கூறினர். இதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories