கம்யூனிஸ்ட்களின் கல்வீச்சால் பந்தளத்தில் உயிரிழந்த பக்தர்! இந்து அமைப்பினர் மீது தொடரும் தாக்குதலால் பதற்றம்!

IMG 20190103 135111 - 2026

கம்யூனிஸ்ட்களின் கல்வீச்சால் பந்தளத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்து அமைப்பினர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கங்கே தாக்குதல் தொடுத்ததால், இரு தரப்பும் மாறி மாறி கல்வீச்சிலும் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சபரிமலையில் இரு பெண்கள் கேரள அரசால் வலுக்கட்டாயமாக அழைத்துவரப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கம்யூனிஸ்ட்களின் கல்எறிதல் தாக்குதலால் கொலை செய்யப் பட்டுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில், இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சபரிமலைக்குள் பெண்கள் இருவர் நுழைந்தார்கள் என்று தகவல் வெளியானதும், அதனை முதல்வர் பிணராயி விஜயன் உறுதி படுத்தி தகவல் வெளியிட்டதும், நேற்று மாலையிலேயே போராட்டங்கள் தொடங்கி விட்டன.

திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்னர் போராட்டம் நடத்தப் பட்டது. டயர்கள் எரிக்கப் பட்டன. முதல்வர் பிணராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.

இந்நிலையில், பம்பை அருகே பந்தளம் பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பாஜக., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் உருவானது! இந்த மோதலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்! இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கிக் கொண்டனர். இந்தக் கலவரத்தில் சபரிமலை கர்ம சமிதியைச் சேர்ந்த சந்திரன் உண்ணி என்பவர் கல்வீச்சில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயது நிரம்பிய சந்திரன் உண்ணி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தக் கலவரத்திற்கு காரணம் என்று பாஜக.,வினர் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் சந்திரன் உண்ணியை கொன்றதாக பாஜக.,வினர் கூறினர். இதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories