தெருவோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரர்… செயற்கைக் காலில் ரூ.96 ஆயிரம்!

2000rupeenote - 2026

பெங்களூர் கண்டோன்மெண்ட் அருகில் தெருவோரத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரர் தனது செயற்கை காலில் ரூ. 96 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் பகுதியில் சில வருடங்களாக 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஷரீப் பிச்சை எடுத்து வந்தார். சாலையோரத்தில் உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தார் ஷரீப் சாப்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து அவரது உடலை அப்புறப்படுத்தினார். அப்போது, அவர் பொருத்தியிருந்த செயற்கைக் கால் மிகவும் கனமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அதனை சோதனையிட்டனர். அதில், கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் அளவுக்கு பணம் இருந்துள்ளது. ரூபாய் நோட்டுகளும், சில்லரைகளுமாக, 500,200,100,50,20,10 நோட்டுகள் என ரூ.96 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

திருட்டு பயம் காரணமாக பணத்தை தனது செயற்கைக் காலில் மறைத்து வைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

போலீஸார் இது குறித்துக் கூறியபோது, 500 ரூபாய் நோட்டுகள் 42, 100 ரூபாய் நோட்டுகள் 470, ரூ.200 நோட்டுகள் 20, ரூ.50 நோட்டுகள் 250, ரூ. 20 நோட்டுகள் 430, ரூ. 10 நோட்டுகள் 528 மற்றும் நாணயங்கள் சில என மொத்தம் அவரிடம் ரூ.96,760 இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் அவரது கால் அழுகவே, ஒரு கால் எடுக்கப் பட்டு, அதில் செயற்கைக் கால் ஒன்று பொருத்தப் பட்டது. ஷரீப்பின் சகோதரி ஹைதராபாத்தில் இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்ததும், அவருக்கு ஷரீப்பின் இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories