வஜ்ரா பீரங்கியில் அமர்ந்து கம்பீரமாக உலா வந்த மோடி!

Published:

modi in tank - 2026

இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ள கே-9 வஜ்ரா பீரங்கி வாகனத்தை பிரதமர் @narendramodi நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.

வஜ்ரா வாகனத்தில் ஏறி அமர்ந்து ஆய்வுப் பாதையில் சிறிது தொலைவுக்கு சென்றார்.

பின்னர் இது குறித்து அவர் தெரிவித்த போது, எல்.அண்ட் டி.,யில் இந்த டாங்க் தயாரிப்பில் உழைத்த குழுவினர் அனைவரையும் தாம் மனமுவந்து பாராட்டுவதாக மோடி கூறியுள்ளார். நாட்டைப் பாதுகாக்க தனித்துவமான அமைப்புடன் பாதுகாப்புத் துறையில் ஈடுபடுத்தப்படும் வஜ்ரா கே 9 சிறப்பான சேவை செய்யும் என்று கூறியுள்ளார் மோடி.

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஹசிரா என்ற இடத்தில் எல் அண்ட் டி நிறுவனத்தின் பீரங்கி தயாரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். அப்போது அங்கிருந்த கே9 வஜ்ரா பீரங்கியில் ஏறி சிறிது தூரம் பிரதமர் பயணித்தார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இது குறித்துக் கூறிய மோடி, பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியார் நிறுவனமும் இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய ராணுவத்திற்கு கே9 வஜ்ரா என்ற ரகத்தை சேர்ந்த 100 பீரங்கிகளை 42 மாதங்களில் தயாரித்து வழங்க 2017 ஆண்டும் எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img