December 6, 2025, 1:09 AM
26 C
Chennai

சபரிமலை ஐயனின் விளையாடல்! கம்யூனிஸ்ட் ஏஜெண்டாக வந்த கனகதுர்காவை துரத்தியடித்த கணவர்!

kanakadurga - 2025

லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும், கேலி செய்யும் விதமாகவும், சபரிமலைக்கு கம்யூனிஸ்டின் கைக்கூலியாக கள்ளப் பயணம் மேற்கொண்ட கனகதுர்காவை அவரது கணவர் துரத்தி அடித்தார். ஏற்கெனவே மாமியாரால் விரட்டப்பட்ட கனகதுர்கா, தற்போது கணவரால் துரத்தியடிக்கப் பட்டுள்ளார்.

சபரிமலைக்கு கம்யூனிஸ்ட் அரசின் கைக்கூலியாக, கள்ளத் தனமாக, நள்ளிரவில் பயணம் மேற்கொண்டு திரும்பிய கனகதுர்காவை, அவரது கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தார். வீட்டில் சேர்க்கவும் மறுத்துவிட்டார் என்று கூறப் படுகிறது.

கம்யூனிஸ்ட் கொள்கைகளுடன் சுற்றிக் கொண்டிருந்த பிந்து(40), கனகதுர்கா(39) என்ற இரண்டு நடுத்தர வயது பெண்கள், ஜன.2 ஆம் தேதி அன்று எவருக்கும் தெரியாமல், பக்தர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கோயில் நடை மூடப் பட்டிருந்த அதிகாலை நேரத்தில், போலீஸாரின் துணையுடன் திருட்டுத் தனமாக சபரிமலை சந்நிதி முன் நிறுத்தப் பட்டனர். ஓரிரு நொடிகளில் அங்கிருந்து திரும்பினர்.

அரசின் போலீஸ் துணையுடன் இப்படி நடந்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவர்கள் இருவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வீட்டிற்குத் திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து காயத்துடன் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கனகதுர்கா.

இதனிடையே, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்தனர். அதை எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கும் படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து கனகதுர்கா, மலப்புரம் மாவட்டம் பெரிந்தாலமன்ன தாலுகா, அங்காடிபுரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். ஆனால் அவரது கணவர் கிருஷ்ணன் உன்னி மாமியார் மற்றும் குழந்தைகள் கனகதுர்காவை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளும் கதவைப் பூட்டி சாவியுடன் வேறு இடத்திற்குச் சென்று விட்டனர். இதை அடுத்து போலீசார் கிருஷ்ணன் உன்னியை காவல் நிலையத்துக்கே வரவழைத்துப் பேசினர். அப்போது கனகதுர்காவை உடன் அழைத்து செல்ல அவர் மறுத்து விட்டார்.

இதை அடுத்து போலீசார் கனகதுர்காவை பெரிந்தாலமன்னவில் இருக்கும் மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அங்கே அவருக்கு காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

குடும்பம் நன்றாக இருக்கவேண்டும், குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு பயபக்தியுடன் சபரிமலைக்குச் சென்று வரும் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பங்கள் நன்றாக வாழ்கின்றன. ஆனால், ஐயனின் கட்டளையை மீறி சபரிமலையை கேலிப் பொருளாக்கியதற்காக ஐயனின் திருவிளையாடல் இது என்கின்றனர் பக்தகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories