இந்திய மாணவர்களே… உங்கள் செயற்கைக் கோள்களைக் கொடுங்கள்! நாங்கள் ஏவுகிறோம்! ‘இஸ்ரோ’ சிவன் அழைப்பு!

pslv c44 sivan - 2026

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நேற்று இரவு பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட் மூலம், மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோளுடன், மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் என்ற குறைந்த ஆயுள் கொண்ட செயற்கைக்கோளையும் ஏவியது. இதை அடுத்து மாணவர்களின் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ தயாராக இருப்பதாக இஸ்ரோ சிவன் கூறினார்.

மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் செயற்கைக் கோள் 1.2 கிலோ எடை கொண்டது. ஆய்வுப் பணிகளுக்கான இந்த செயற்கைக்கோள் குறைந்த ஆயுள் காலம் கொண்டது. பொதுவாக, ஒரு ராக்கெட்டைஏவும் போது துவக்க நிலை உந்து சக்திக்காக ராக்கெட்டைச் சுற்றி ஆறு பூஸ்டர்கள் பொருத்தப்படும். ஆனால் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் குறைந்த எடை கொண்டது என்பதால், முதல் முறையாக, இரண்டு பூஸ்டர்கள் மட்டுமே பொருத்தப்பட்டன.

ராக்கெட்டில் நான்கு நிலைகள் இருக்கும். அதில் கூம்பு போன்ற இறுதி நிலையில்தான் செயற்கைக்கோள்கள் வைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப் படும். மூக்கு போன்ற அந்த இறுதி நிலையில் உள்ள தகடுகள் பிரிந்து செயற்கைக் கோள் விண்ணில் நிலை நிறுத்தப் படும்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின், நான்காவது நிலை அங்கேயே சுற்றி வரும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 7 மாதங்கள் இருக்கும். தற்போது, இஸ்ரோ இந்த ராக்கெட்டின் நான்காவது நிலையில் உள்ள பாகத்தில் மாணவர்கள் உருவாக்கிய கலாம்சாட் செயற்கைக்கோளை பொருத்தியுள்ளது. இந்த முயற்சி முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பின், இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது, பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், துவக்க நிலை உந்துதலுக்காக இரண்டு பூஸ்டர் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் செலவு குறையும். சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, எஸ்எஸ்எல்வி., எனப்படும், ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள்’ என புதிய வகை ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரோ மாணவர்களின் ஆய்வு முயற்சிகளுக்கு திறந்தே இருக்கிறது. இஸ்ரோ இந்திய மாணவர்கள் சமூகத்துக்கானது. உங்கள் செயற்கைக்கோள்களை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உங்களுக்காக நாங்கள் விண்ணில் செலுத்தித் தருகிறோம். நாம் இந்தியாவை அறிவியல் நாடாக மாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories