இந்திய மாணவர்களே… உங்கள் செயற்கைக் கோள்களைக் கொடுங்கள்! நாங்கள் ஏவுகிறோம்! ‘இஸ்ரோ’ சிவன் அழைப்பு!

pslv c44 sivan - 2026

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நேற்று இரவு பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட் மூலம், மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோளுடன், மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் என்ற குறைந்த ஆயுள் கொண்ட செயற்கைக்கோளையும் ஏவியது. இதை அடுத்து மாணவர்களின் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ தயாராக இருப்பதாக இஸ்ரோ சிவன் கூறினார்.

மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் செயற்கைக் கோள் 1.2 கிலோ எடை கொண்டது. ஆய்வுப் பணிகளுக்கான இந்த செயற்கைக்கோள் குறைந்த ஆயுள் காலம் கொண்டது. பொதுவாக, ஒரு ராக்கெட்டைஏவும் போது துவக்க நிலை உந்து சக்திக்காக ராக்கெட்டைச் சுற்றி ஆறு பூஸ்டர்கள் பொருத்தப்படும். ஆனால் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் குறைந்த எடை கொண்டது என்பதால், முதல் முறையாக, இரண்டு பூஸ்டர்கள் மட்டுமே பொருத்தப்பட்டன.

ராக்கெட்டில் நான்கு நிலைகள் இருக்கும். அதில் கூம்பு போன்ற இறுதி நிலையில்தான் செயற்கைக்கோள்கள் வைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப் படும். மூக்கு போன்ற அந்த இறுதி நிலையில் உள்ள தகடுகள் பிரிந்து செயற்கைக் கோள் விண்ணில் நிலை நிறுத்தப் படும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின், நான்காவது நிலை அங்கேயே சுற்றி வரும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 7 மாதங்கள் இருக்கும். தற்போது, இஸ்ரோ இந்த ராக்கெட்டின் நான்காவது நிலையில் உள்ள பாகத்தில் மாணவர்கள் உருவாக்கிய கலாம்சாட் செயற்கைக்கோளை பொருத்தியுள்ளது. இந்த முயற்சி முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பின், இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது, பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், துவக்க நிலை உந்துதலுக்காக இரண்டு பூஸ்டர் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் செலவு குறையும். சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, எஸ்எஸ்எல்வி., எனப்படும், ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள்’ என புதிய வகை ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரோ மாணவர்களின் ஆய்வு முயற்சிகளுக்கு திறந்தே இருக்கிறது. இஸ்ரோ இந்திய மாணவர்கள் சமூகத்துக்கானது. உங்கள் செயற்கைக்கோள்களை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உங்களுக்காக நாங்கள் விண்ணில் செலுத்தித் தருகிறோம். நாம் இந்தியாவை அறிவியல் நாடாக மாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories