நேதாஜி உறவினர்கள் நேருவால் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

nehru-subash-boseபுது தில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கூறப்பட்ட பின்னர், அவரது உறவினர்கள் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் உளவு பார்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது நேதாஜியின் சகோதரர் மகனான சிசிர் குமார் போஸ், நெருங்கிய உறவினர் அமியாநாத் போஸ், நேதாஜியின் ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் உளவு பார்க்கப் பட்டுள்ளனர். அவர்கள், ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த 1948ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் உளவுத்துறையின் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர் அவ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இத்தகைய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஆவணக் காப்பகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 2 முக்கிய கோப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து அனுஜ்தர் கூறியபோது, ‘ரகசியமான இந்தக் கோப்புகள் இரண்டும் தவறுதலாக தேசிய ஆவணக் காப்பகத்துக்கு வந்துவிட்டன. இந்தக் கோப்புகள் முக்கியத் தகவல்களைக் கொண்டவை. ஏனெனில் அவற்றிலுள்ள சின்னச் சின்ன விஷயங்கள் கூட உன்னிப்பாகக் கவனித்து எழுதப்பட்டுள்ளன’ என்றார். உளவு பார்க்கப்பட்டது தொடர்பான கோப்புகள் பலவற்றில் உளவுத்துறை அதிகாரிகள் நேதாஜி குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து கையால் எழுதப்பட்ட ஆவணங்களாகக் காணப்படுகின்றன. அமியாநாத் போஸ் கல்கத்தாவில் வசித்தபோதும், தில்லி உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளுக்கு பயணம் சென்றபோதும் அவருடைய நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது இந்தக் கோப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், நேதாஜியின் ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல், சிசிர்குமார் போஸ், வரலாற்று நிபுணர் லியோனார்டு கார்டன், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்காவில் வசித்தவர்களுக்கு எழுதிய கடிதங்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் அனைத்தும் மத்திய உளவுத்துறையால் பிரித்துப் பார்க்கப்பட்டிருப்பதுடன் அவை நகல் எடுக்கப்பட்டுள்ளன. நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகும் எமிலி சூசென்கல் குறித்து எழுதும்போது நேதாஜியின் மனைவி என்பதை உளவுத்துறையினர் தவறாமல் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

Topics

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Entertainment News

Popular Categories