பாகிஸ்தானிடம் சிக்கிய விமானி நம் சென்னைவாசி! விதியின் சதியால் எல்லையில் விழுந்தவர்!

abinandan airforce - 2026

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது அதிர்ச்சியூட்டும் செய்திதான்!

விமானி அபிநந்தனின் பூர்வீகம் திருவண்ணாமலை! வளர்ந்தது சென்னையில்! தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவரின் சர்வீஸ் எண் 27981. இவர் விங் கமாண்டர் விமானி. இவர் 173 கோர்ஸ் பிரிவை சேர்ந்தவர். அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார்.

2004ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன், என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். இவர் படித்தது, வளர்ந்தது, விமானப் படைக்கு முதற் கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான். அதன்பின் வட மாநிலங்களில் பல இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றி இருக்கிறார்.

அபிநந்தனின் பூர்வீகம் திருண்ணாமலை அருகே திருப்பனவூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அபிநந்தன் குடும்பத்தினர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

abhinanthan - 2026

அபிநந்தன் மிகவும் துணிச்சல் மிக்கவர். இவர் அவ்வளவு எளிதில் பாகிஸ்தானியர்களிடம் சிக்கவில்லை…விதி! பால்கன் 16 என்ற அதிக திறன் கொண்ட பாகிஸ்தான் தாக்குதல் விமானத்தை, மிக் ரக விமானத்தின் உதவியுடன் விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தி வீழ்த்தியுள்ளார்.

பதில் தாக்குதலில் விமானம் சேதம் அடைந்த நிலையில், தற்காப்புக்காக சீட் எஜக்ட் செய்ய, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் லேண்ட் ஆகிவிட்டார்.! ஆனாலும், மனுஷனுக்கு தில் அதிகம்தான் என்கிறார்கள்! அங்குசத்தை வைத்து யானையை மிரட்டுவது போன்று மிரட்டியுள்ளார் இவர் என்று பெருமைப் படுகிறார்கள்.

இவரை பாகிஸ்தானியர்கள் சித்ரவதை செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இவற்றை பாகிஸ்தானே வெளியிட்டுள்ளது. இதனை இந்திய வெளியுறவுத் துறையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், ஐ.நா. சர்வதேச போர் விதிகளின் படி, அபிநந்தனை கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் அவருக்கு எந்த வித சித்ரவதைகளும் கொடுக்கக் கூடாது என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் ஒலித்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories