இந்தியாவுக்கு எதிராக எஃப்-16: பாகிஸ்தானிடம் விசாரணை நடத்தும் அமெரிக்கா!

f16 pakistan - 2026

பயங்கர வாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவோம் என்ற உறுதி மொழியின் பேரில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எஃப்-16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இந் நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானிடம் விசாரணை நடத்துகிறது அமெரிக்கா!

கடந்த பிப்.26 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத முகாம் முற்றிலும் தகர்க்கப் பட்டது. இதனால் பழி வாங்கவும், பாகிஸ்தான் போருக்கு அஞ்சாத நாடு என்பதை நிரூபிக்கவும் பதிலடி தருவதற்காக, பாகிஸ்தானின் விமானங்கள் பிப்.27ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவி, குண்டுகளைப் போட்டன. இந்த குண்டுகள் இந்திய ராணுவத்தினரை குறிபார்த்தும், பொதுமக்கள் இருக்கும் இடங்களிலும் விழுந்தன.

குறிப்பாக, பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்-16 வகை போர் விமானங்கள் காஷ்மீரின் ரஜவுரி பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயன்றன. அந்த விமானங்களை இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டின. அப்போது பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு இந்திய எல்லையிலேயே விழுந்தது.

pak aircraft f16 - 2026

இந்த வான் தாக்குதலின் போது, பாகிஸ்தான் போர் விமானங்களை அவர்கள் நாட்டு எல்லைக்கே துரத்திச் சென்று இந்திய போர் விமானங்கள் போரிட்டன. அப்போது, இந்திய விமானி அபிநந்தன் இந்தியாவின் மிகப் பழைய மிக்-21 ரக விமானத்தில் துரத்திச் சென்று, பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை விரட்டினார். அப்போது மற்றொரு பாகிஸ்தான் போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கி, அபிநந்தன் சென்ற மிக்-21 ரக விமானம் கோளாறு ஏற்பட்டது. முன்னதாக, அவர் தாக்கிய ஏவுகணையால் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாகத் தெரிய வந்தது. இந்நிலையில், தான் சென்ற விமானம் பழுதடைந்த நிலையில், அந்த விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதித்து அபிநந்தன் உயிர் தப்பினார். ஆனால் அவர் தரையிறங்கிய இடம் பாகிஸ்தான் எல்லை என்பதால், பாகிஸ்தான் ராணுவம் அவரை சிறைபிடித்தது.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

பின்னர் இந்தியப் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால், அமெரிக்கா ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர, அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

plane war - 2026

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, இந்திய நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய எஃப்-16 விமானங்கள் என தகவல் வெளியானது. இதற்கு, சுட்டு வீழ்த்தப் பட்ட விமானத்தின் பாகங்கள் உறுதி செய்தன. ஆனால், அமெரிக்கா இந்த விமானங்களை பாகிஸ்தானுக்குக் கொடுக்கும் போது, இந்த விமானங்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியா மீதான தாக்குதலுக்கோ வேறு விவகாரங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்ட பின்னரே இவை அந்நாட்டுக்கு வழங்கப் பட்டனவாம்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”42″ order=”desc”]

ஆனால் அந்த விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்களை இந்திய விமானப்படை திரட்டியுள்ளதும், இவற்றை முப்படை தளபதிகளும் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது விளக்கியுள்ளதும் அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இருப்பினும், தாங்கள் எஃப்-16 விமானத்தை இந்திய தாகுதலில் பயன்படுத்த வில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், எஃப்-16 விமானங்களின் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் இந்திய விமானப் படை ரேடாரில் பதிவாகியுள்ளதாகவும், அவை குறித்த விவரங்களை அமெரிக்கா வசம் ஒப்படைப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.

இந்நிலையில், எஃப் 16 விமானம் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகக் கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோன் பாக்னர், இது உண்மை என்றால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”5″ tax_term=”2″]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories