February 19, 2026, 11:24 PM
26.4 C
Chennai

இன்று மகா சிவராத்திரி! நிறைவு பெறுகிறது பிரயாக்ராஜ் கும்பமேளா!

kumbh mela2 - 2026உத்தர பிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெற்று வரும் கும்பமேளா இன்று நிறைவு பெறுகிறது. மகா சிவராத்திரியான இன்றுடன் கும்பமேளா நிறைவடைவதை ஒட்டி, திரிவேணி சங்கமத்தில் 1 கோடி பேர் வரை இன்று புனித நீராடுகின்றனர்.

பாரதத்தின் புனித நதிகள் என்று கூறப் படும் கங்கை, யமுனை ஆகியவற்றுடன், புராண கால சரஸ்வதி நதியும் இணையும் மூன்று நதிகள் சங்கமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் தொடங்கியத் கும்பமேளா. இது, மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகின் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வு என்றும், உலகில் மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் ஆன்மிக நிகழ்வு என்றும் பெயர் பெற்ற இந்தக் கும்பமேளா கடந்த 55 நாட்களாக நடந்து வந்தது. இதில் 22 கோடி பேர் வரை புனித நீராடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kumbh mela1 - 2026

ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது. முன்னர் 2013 ஆம் ஆண்டில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது சாதனை அளவாக சுமார் 12 கோடிப் பேர் புனித நீராடினர். இந்த ஆண்டு 22 கோடிப் பேர் புனித நீராடியுள்ளனர். அடுத்த கும்பமேளா 2025ல் நடைபெறும்.

மகா சிவராத்திரியான இன்றுடன் இந்தக் கும்பமேளா நிறைவடைய உள்ளது. இன்று சுமார் ஒரு கோடிப் பேர் வரை புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப் படுவதால், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை, மாநில அரசு செய்துள்ளது! இன்றைய நிகழ்வுக்கு பக்தர்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Kumbh - 2026

கும்பமேளா நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத் தகவல் வந்ததை அடுத்து, துணை ராணுவப்
படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த முறை கும்பமேளாவில் தூய்மை பெரிதும் பேணப் பட்டுள்ளது. மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியில் முழு கவனம் செலுத்தின. இதனால் நகரம் பளிச்செனத் திகழ்கிறது. தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை அண்மையில் பிரதமர் மோடி பாராட்டி, பாத பூஜை செய்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories