இன்று மகா சிவராத்திரி! நிறைவு பெறுகிறது பிரயாக்ராஜ் கும்பமேளா!

kumbh mela2 - 2026உத்தர பிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெற்று வரும் கும்பமேளா இன்று நிறைவு பெறுகிறது. மகா சிவராத்திரியான இன்றுடன் கும்பமேளா நிறைவடைவதை ஒட்டி, திரிவேணி சங்கமத்தில் 1 கோடி பேர் வரை இன்று புனித நீராடுகின்றனர்.

பாரதத்தின் புனித நதிகள் என்று கூறப் படும் கங்கை, யமுனை ஆகியவற்றுடன், புராண கால சரஸ்வதி நதியும் இணையும் மூன்று நதிகள் சங்கமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் தொடங்கியத் கும்பமேளா. இது, மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகின் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வு என்றும், உலகில் மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் ஆன்மிக நிகழ்வு என்றும் பெயர் பெற்ற இந்தக் கும்பமேளா கடந்த 55 நாட்களாக நடந்து வந்தது. இதில் 22 கோடி பேர் வரை புனித நீராடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

kumbh mela1 - 2026

ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது. முன்னர் 2013 ஆம் ஆண்டில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது சாதனை அளவாக சுமார் 12 கோடிப் பேர் புனித நீராடினர். இந்த ஆண்டு 22 கோடிப் பேர் புனித நீராடியுள்ளனர். அடுத்த கும்பமேளா 2025ல் நடைபெறும்.

மகா சிவராத்திரியான இன்றுடன் இந்தக் கும்பமேளா நிறைவடைய உள்ளது. இன்று சுமார் ஒரு கோடிப் பேர் வரை புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப் படுவதால், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை, மாநில அரசு செய்துள்ளது! இன்றைய நிகழ்வுக்கு பக்தர்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Kumbh - 2026

கும்பமேளா நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத் தகவல் வந்ததை அடுத்து, துணை ராணுவப்
படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த முறை கும்பமேளாவில் தூய்மை பெரிதும் பேணப் பட்டுள்ளது. மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியில் முழு கவனம் செலுத்தின. இதனால் நகரம் பளிச்செனத் திகழ்கிறது. தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை அண்மையில் பிரதமர் மோடி பாராட்டி, பாத பூஜை செய்தார்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories