December 5, 2025, 6:30 PM
26.7 C
Chennai

பயங்கரவாதிகளுக்கும் ‘ஜி’ போட்டு மரியாதை தரும் ஒரே கட்சி காங்கிரஸே!

rahulgandhi - 2025

பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். ஏனென்றால் அவர்களை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.

அன்று  அப்சல் குரு ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் ரன்தீப் ப்ரஸ்கோன்வாலா
நேற்று: ஹஃபீஸ் சய்யீத் சஹாப் என்றார் காங்கிரசின் திக்விஜய் சிங்.
இன்று: ‘மசூத் அசார் ஜீ’ என்று அழைக்கிறார் ராகுல் காந்தி.

இன்று இணையத்தில் இந்த வீடியோதான் பிரபலமாகியிருக்கிறது. பாஜக., தலைவர்கள் பலரும் ராகுலின் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக ஸ்மிருதி இரானி இதனைத் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு கமெண்ட் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் ராகுலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இருவருமே பயங்கரவாதிகளை நேசிக்கிறார்கள்! – என்று கருத்துப் பதிவு செய்திருக்கிறார் ஸ்மிருதி இரானி.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுகுறித்து கருத்து தெரிவித்த போது தேசம் ராகுல் காந்தி பயங்கரவாதி மசூத் அசாருக்கு மரியாதை கொடுத்து விளித்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

பயங்கரவாதிகளால் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கும் மக்களுக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்தவர்களுக்கும் ராகுல்காந்தி என்ன சொல்ல வருகிறார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்! அந்த பயங்கரவாதிக்கு அவ்வளவு அதிகமான மரியாதை கொடுத்து பேசுவதன் காரணம் என்ன? ஏன் அவர் ராணுவ தலைவரை குண்டர் என்று குறிப்பிட்டுவிட்டு பயங்கரவாதிக்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார் என்று ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்!

ராகுல் காந்தி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய போது கந்தகாருக்கு விமானத்தை கடத்தி சென்ற தலிபான்கள் மசூத் அசாரை விடுவிப்பதற்காக பேரம் பேசியபோது, அஜித் தோவல்தான் அசாரைக் கொண்டு சென்று விடுவித்தார்! இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, அப்போது மசூத் அசார் ஜி என்றும் மரியாதை கொடுத்து பேசியதைக் கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories