தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான இளம்பெண்!

Published:

  மேற்கு வங்க மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தன் குடும்ப உறவுகளாலேயே பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக புகார் மனு அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள துப்கவுரி காவல் நிலையத்தில் 16 வயது இளம் பெண் ஒருவர் புகார் அளித்த புகாரில், தந்தை, தாய் மாமன் மற்றும் சகோதரன் என மூவரும் கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், இதில் 2 முறை கர்ப்பமடைந்து அதை கலைத்து விட்டதாகவும், மன உளைச்சல் தாங்க முடியாமல் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து தனது தாயிடம் எடுத்துக் கூறியும், அவர் அதைப் பெரிதாகக் காதில் போட்டுக் கொள்ளாமல், “அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை, உன் உறவினர்கள்” என்று சமாதானம் சொன்னதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவரிடம் தான் அனுபவிக்கும் கொடூரத்தை அந்தப் பெண் கூற, பதறிப்போன ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர் குடும்ப உறுப்பினர்கள் மீது புகார் கொடுக்கச் செய்துள்ளனர். இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான அந்தப் பெண்ணின் தாயைத் தேடி வருகின்றனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img