தமிழகத்தில் மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய உச்ச நீதிமன்றம தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்கள் செய்ய தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய தடை
விதித்துள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Published:


