December 6, 2025, 3:28 AM
24.9 C
Chennai

வயநாட்டில் மனுதாக்கல் செய்தார் ராகுல்! சிபிஎம்.,க்கு எதிராக ஒரு வார்த்தைகூட பிரசாரம் செய்ய மாட்டாராம்!

rahul file nomination2 - 2025அமேதி தொகுதியில் மட்டுமல்லாமல், வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது சகோதரி பிரியங்காவுடன் வந்து வயநாட்டில் மனு தாக்கல் செய்தார்.

புதன் கிழமை நேற்று இரவு விமானம் மூலம் கோழிக்கோடு வந்த ராகுலை காங்கிரஸார் சிறப்பாக வரவேற்றனர். கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றனர்.

அவருக்கு முன்னதாகவே வந்திருந்த பிரியங்காவும், ராகுலும் கோழிக்கோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தனர். பின் இன்று காலை வயநாட்டுக்கு இருவரும் ஹெலிகாப்டரில் வந்தனர். பின்னர் கல்பாத்தியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு சகோதரி பிரியங்காவுடன் வந்த ராகுல் இன்று மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் 23-ம் தேதி வயநாட்டில் வாக்குப் பதிவு நடைபெறு கிறது.

ராகுலின் வருகையை ஒட்டி கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டிருந்தது.’

rahul file nomination - 2025

உ.பி.யில் உள்ள அமேதியில் 4வது முறையாக தொடர்ந்து போட்டியிடும் ராகுல், முதல் முறையாக வயநாட்டிலும் சேர்ந்து இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தாம் ஏன் வயநாட்டில் போட்டியிடுகிறேன் என்பதற்கு ”தென்னிந்தியாவை மோடி புறக்கணிக்கிறார். உங்களுடன் நான் இருக்கிறேன் என்பதைக் காட்டவே வயநாட்டில் போட்டியிடுகிறேன்” என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது கூறியிருந்தார் ராகுல்!

இதனிடையே, வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரத் தர்ம ஜன சேனா கட்சித் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார்.

rahul priyanka - 2025மனுத் தாக்கல் செய்த பின்னர், கல்பாத்தியில் இருந்து சாலை வழியாக வாகனம் மூலம் ராகுல் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு தொண்டர்கள் பலர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, தாம் சிபிஎம் கட்சிக்கு எதிராக போட்டியிடவில்லை என்றும், தமக்கு மோடியே எதிரி என்றும், எனவே தாம் சிபிஎம் வேட்பாளருக்கு எதிராகவோ, சிபிஎம் கட்சிக்கு எதிராகவோ, ஆளும் மாநில அரசுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூட தேர்தல் பிரசாரத்தின் போது பேசப் போவதில்லை என்று தெளிவாகக் கூறினார் ராகுல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories