நிதி நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாயை அவசரகால நிதியாக எஸ்.பி.ஐ. தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு வழங்குகிறது.
தேவையான நிதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில் ஏற்கெனவே ஒப்பந்த பாக்கி, சம்பள பாக்கியால் இயக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்ட விமானங்களை மீண்டும் உடனடியாக இயக்க முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், நேற்று நண்பகல் 12 மணி முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.


