மும்பை மாடலிங் பெண் பலாத்காரம்: 3 போலீஸார் உள்பட 6 பேர் கைது

மும்பை: மும்பையில் மாடலிங் பெண்ணை பலாத்காரம் செய்து, பணம் பறித்தது தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் சகி நிகா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக ஏப். 3ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, தலைமைக் காவலர் கோடே ஆகியோர் அந்த ஹோட்டலுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சாகர், இப்ராகிம் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் அவர்களுடன் இருந்தனர். ஆனால், அந்தச் சோதனையின்போது பாலியல் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த 28 வயது மாடலிங் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், 3 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 2 பேர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்து சுமார் 20 நாட்கள் ஆன நிலையில், மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியாவை இரு தினங்களுக்கு முன்னர் அந்தப் பெண் சந்தித்து நடந்தவற்றை அவரிடம் தெரிவித்து புகார் அளித்தார். இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, கோடே உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பலாத்காரம், பாலியல் தொந்தரவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories