மும்பை: மும்பையில் மாடலிங் பெண்ணை பலாத்காரம் செய்து, பணம் பறித்தது தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் சகி நிகா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக ஏப். 3ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, தலைமைக் காவலர் கோடே ஆகியோர் அந்த ஹோட்டலுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சாகர், இப்ராகிம் மற்றும் ஒரு பெண் ஆகியோரும் அவர்களுடன் இருந்தனர். ஆனால், அந்தச் சோதனையின்போது பாலியல் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த 28 வயது மாடலிங் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், 3 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 2 பேர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்து சுமார் 20 நாட்கள் ஆன நிலையில், மும்பை காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியாவை இரு தினங்களுக்கு முன்னர் அந்தப் பெண் சந்தித்து நடந்தவற்றை அவரிடம் தெரிவித்து புகார் அளித்தார். இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் சுனில் கப்தே, சுரேஷ் சூர்யவன்ஷி, கோடே உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பலாத்காரம், பாலியல் தொந்தரவு, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
ஆன்மிகச் செய்திகள்
செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை
தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
ஆன்மிகச் செய்திகள்
செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை
தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி
கட்டுரைகள்
பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்
பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

