ராகுலுக்கும் ‘கட்’ ! இது மம்தாவின் ‘நியாய்’ !

rahul mamta1 - 2026

மேற்கு வங்கத்தில் ராகுல் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி இல்லை என்று மம்தா அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால், அவரது பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 14-ஆம் தேதி நடைபெற உள்ள பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிடப் பட்டிருந்தது. இதற்காக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை அங்குள்ள போலீஸ் மைதானத்தில் தரையிறங்க காங்கிரஸார் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால் போலீஸ் மைதானத்தில் ராகுல் வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதை அடுத்து ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று காங்கிரஸார் கூறினர்.

இருப்பினும், சட்ட விதிகளின் படி ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், காங்கிரசார் மாற்று இடத்தை தேர்வு செய்து மீண்டும் தங்களை அணுகவில்லை என்றும் சிலிகுரி காவல் ஆணையர் மீனா தெரிவித்துள்ளார்.

முன்னதாக மெகா கூட்டணி ஆசையில் இருந்த ராகுல், மம்தா தன்னை பிரதமர் வேட்பாளராக ஏற்காத நிலையில், கடும் விரக்தியிலும் கோபத்திலும் இருந்தார். இதை அடுத்து மம்தா பானர்ஜியை குற்றம் சாட்டி, மேடைகளில் பேசினார். இந்நிலையில், பாஜக., தலைவர் அமித் ஷாவுக்கு அளித்த அதே நெருக்கடியை ராகுலுக்கும் அளித்து தனது நியாய் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories