December 5, 2025, 8:18 PM
26.7 C
Chennai

அப்துல் கலாம் கனவை நனவாக்குவதே நம் லட்சியம்: பிரதமர் மோடி!

modi ramanathapuram - 2025

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்குவதே நமது லட்சியம் என்று உறுதியாகக் கூறினார் பிரதமர் மோடி!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்,

ராமநவமி நாளில், ராமபிரானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த  இந்தப் புனித பூமிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். காசியும் ராமேஸ்வரமும் மிகவும் புண்ணியம் வாய்ந்தவை. காசியின் எம்பி.,யாக ராமேஸ்வரம் மண்ணில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் பிரதமர் மோடி.

மிஷன் சக்தி திட்டம் பெற்ற வெற்றியை அப்துல் கலாம் இருந்திருந்தால் பாராட்டி யிருப்பார் என்றும்,  அப்துல்கலாம் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

முன் எப்போதும் இல்லாத அளவில் வறுமையை ஒழிக்க பாடுபடுகிறோம் என்று கூறிய மோடி, சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார்.

ஆயுஷ்மான் திட்டம் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி,  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மற்றும் மீனவர்களுக்கும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றார் !

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இஸ்ரோ உதவியுடன் மீனவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கடலில் மீனவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே அறிவிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார் பிரதமர் மோடி.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடக் கூறினார் பிரதமர் மோடி.

நாம் சிறந்த அறிஞரும், அறிவியலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமுக்கு சிறந்த நினைவிடம் அமைத்திருக்கிறோம். இதற்கு முன்னர் காங்கிரஸில் முக்கியத் தலைவர்களாகவும், ஜனாதிபதிகளாகவும் இருந்த தமிழர்களான ஆர்.வெங்கட்ராமன், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு காங்கிரஸ் ஏதாவது மரியாதை செய்திருக்கிறதா? கேரளாவில் இருந்து வந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல்,
ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டுமே அனைத்தையும் சொந்தமாக ஆக்கியிருக்கிறார்கள். சிறிய கிராமம் நகரம் என எதிலும் விட்டு வைக்காமல், சாலை களுக்கு அந்தக் குடும்பத்தின் பெயர் சூட்டியிருக்கிறார்கள்… என்று பேசினார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories