மன்னுபுகழ் கோசலை-குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்

கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே! செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத கன்னிநன்மா மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!

திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!

கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!

எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தாமரை மலர் மேல் அமர்ந்து இந்த உலகை எல்லாம் பிரமன் உருவில் படைத்தவனே! மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே! உன்னைப் பார்த்தவர் எல்லாம் தங்கள் மனத்தை உன்னிடம் வழங்கும் படி பேரழகுடைய, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எட்டு திசைகளையும் ஆளும் வல்லமையுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!

தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!

கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!

எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தேனும் மகரந்தங்களூம் நிறைந்த பூக்களைச் சூடியதால் அவை நிறைந்த கருங்குழலை உடைய கோசலையின் குலத்தில் உதித்த குழந்தையே! என்றும் தங்கும் பெரும் புகழ் கொண்ட சனகனின் மருமகனே! தசரதனின் மகனே தாசரதீ! கங்கையை விட புனித மிக்க தீர்த்தங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எங்கள் குலத்தின் இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்

மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்

காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!

ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் நான்முகப் பிரமனைப் படைத்தவனே! தசரதனின் பெருமை மிக்க குழந்தையே! மிதிலை இளவரசியின் மணவாளனே! வண்டு கூட்டங்கள் பூக்களில் மது உண்டு இசை பாடும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கையில் மிகப் பெரிய வில்லினை ஏந்தியவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி

ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!

சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!

தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!

நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரத நம்பிக்கே அருளி தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே! அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத்தரசே! தார் (மாலை) அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! தாலேலோ!

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!

அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!

சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

சுற்றம் (ஊரார் உறவினர்) எல்லாம் பின் தொடர்ந்து வர தொன்மையான காட்டை அடைந்தவனே! வேறு கதி அற்றவர்களுக்கு அரிய மருந்து போன்றவனே (எல்லாம் தரும் அமுதம் போன்றவனே)! அயோத்தி நகருக்கு உரிமையானவனே! கற்றவர்கள் என்றும் வாழும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! சிற்றன்னையாம் கைகேயியின் கட்டளையைத் தலை மேல் கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!

வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!

காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!

ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

ஆலின் இலைமேல் சிறு பாலகனாய் உருக்கொண்டு பிரளயக் காலத்தில் உலகமெல்லாம் உண்டவனே! வாலியைக் கொன்று கிஷ்கிந்தை அரசை இளைய வானரமாம் சுக்ரீவனுக்குக் கொடுத்தவனே! தென்றல் காற்று (காலின் மணி) நதியின் கரையின் மேல் அலை அடிக்கும் படி செய்யும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! ஆலி நகருக்கு அதிபதியே! அயோத்தி மன்னனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!

அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!

கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!

சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

பாறைகளால் அணை கட்டி மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! அலை வீசும் பாற்கடலைக் கடைந்து அமரருக்கு அமுதம் அருளியவனே! கலைகள் எல்லாம் வல்லவர் நிறைந்து வாழும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கரத்தில் வில் தாங்கியவனே! காவலனே! சீராமா! தாலேலோ!

தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!

வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!

களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!

இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

சுருண்டு விழும் நறுமணம் கொண்ட முடியை உடைய தயரதன் தன் குலத்தில் உதித்த குழந்தையே! வளைந்து நிற்கும் ஒரு வில்லைக் கொண்டு மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! கழுநீர்ப்பூக்கள் எல்லாத் திசைகளிலும் அலரும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! பக்தர்களுக்கு அருள் தருபவனே! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!

யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!

காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!

ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவர்கள், அசுரர்கள், திசைகள் என்று எல்லாவற்றையும் படைத்தவனே! எல்லோரும் வந்து திருவடிகளை வணங்க திருவரங்க நகரில் துயில் கொண்டவனே! காவிரி என்னும் நல்ல நதி பாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! நெடிய சிறந்த வில்லை வலக்கரத்தில் உடையவனே! இராகவனே! தாலேலோ!

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்

தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை

கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன

பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

பகைவர்களால் என்று தொடப்படாத பெரிய மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் காகுத்தன் தன் திருவடி மேல் தாலேலோ என்று சொன்ன தமிழ்மாலையாம், பகைவரைக் கொல்லத் துடிக்கும் வேலை வலக்கையில் ஏந்திய வெண்கொற்றக் குடையைக் கொண்ட 12998475 1156470971064733 8600282571427829677 n 2 - 2026களும் வல்லவர்கள் இறைவனுடன் என்றும் தோழமை கொண்ட பக்தர்கள் ஆவார்கள்!

சேர மன்னராய் இருந்து அடியவர்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories