முடங்கிய ஜெட் ஏர்வேஸ் சேவை விரைவில் மீளும்! வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை!

jet airways 3 - 2026

பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு கண்டு விரைவில் மீண்டும் விமான சேவை தொடங்கும் என வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, வங்கிகள் அவசர நிதியுதவி வழங்க மறுத்ததால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை  ஏப்.17ஆம் தேதியுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிறுவனம் 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார்.

இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து 75 சதவீத பங்குகளை விற்க வங்கிகள் கூட்டமைப்பு முயற்சி செய்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனால் இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.1,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய முடியவில்லை.

இந்நிலையில் குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள் பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால் 2018 டிசம்பரில் 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாகப் குறைந்து விட்டது.

உடனடியாக ரூ.400 கோடி நிதியுதவி அளித்தால் சேவையை தொடரலாம் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால் மேற்கொண்டு நிதியுதவி அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன.

இதனால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருப்பினும், வங்கிகள் கூட்டமைப்பு விமான சேவை விரைவில் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜெட் ஏர்வேஸில் பதிவு செய்திருந்த சர்வதேச பயணிகளுக்கு ஏர் இந்தியா சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

பாரிஸ், லண்டன் ஹீத்ரூ, சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், அபுதாபி, ஜெட்டா, டாம்மம், மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்கான குறைக்கப்பட்ட சிறப்பு பயணக் கட்டணத்தை ஜெட் ஏர்வேஸில் பதிவு செய்திருந்த பயணிகள் 9W என்ற சிறப்பு குறியீட்டுடன் சலுகையாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories