முடங்கிய ஜெட் ஏர்வேஸ் சேவை விரைவில் மீளும்! வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை!

jet airways 3 - 2026

பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப் பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு கண்டு விரைவில் மீண்டும் விமான சேவை தொடங்கும் என வங்கிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, வங்கிகள் அவசர நிதியுதவி வழங்க மறுத்ததால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை  ஏப்.17ஆம் தேதியுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிறுவனம் 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார்.

இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து 75 சதவீத பங்குகளை விற்க வங்கிகள் கூட்டமைப்பு முயற்சி செய்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனால் இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.1,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய முடியவில்லை.

இந்நிலையில் குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள் பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால் 2018 டிசம்பரில் 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாகப் குறைந்து விட்டது.

உடனடியாக ரூ.400 கோடி நிதியுதவி அளித்தால் சேவையை தொடரலாம் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால் மேற்கொண்டு நிதியுதவி அளிக்க வங்கிகள் மறுத்து விட்டன.

இதனால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருப்பினும், வங்கிகள் கூட்டமைப்பு விமான சேவை விரைவில் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜெட் ஏர்வேஸில் பதிவு செய்திருந்த சர்வதேச பயணிகளுக்கு ஏர் இந்தியா சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.

பாரிஸ், லண்டன் ஹீத்ரூ, சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், அபுதாபி, ஜெட்டா, டாம்மம், மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்கான குறைக்கப்பட்ட சிறப்பு பயணக் கட்டணத்தை ஜெட் ஏர்வேஸில் பதிவு செய்திருந்த பயணிகள் 9W என்ற சிறப்பு குறியீட்டுடன் சலுகையாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories