December 5, 2025, 1:59 AM
24.5 C
Chennai

திட்டம் தமிழகத்தில்… நடத்தப் பட்டது இலங்கையில்! அதிர்ச்சி அளிக்கும் பின்னணி!

church bomb - 2025

தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய குண்டுவெடிப்பு… பாதுகாப்பு காரணமாக இலங்கைக்கு இடம்பெயர்ந்தது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

இலங்கையில் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கப்போவதாக இந்திய உளவுத்துறை, இலங்கை அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்று, இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்று கூறப் படுகிறது. இதனால்தான் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஏதாவது ஒரு நாட்டில் கிறிஸ்தவ சர்ச்சுகளைக் குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்த புதிதாக தோன்றியுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாக 6 மாதங்களுக்கு முன்பே உளவுத் தகவல் கசிந்துள்ளது.

srilanka funeral - 2025இந்தத் தக்குதல்கள், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோர சர்ச்சுகளில் நடத்தப்படலாம் என்று ரகசிய தகவலில் கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்ததால், தங்கள் தாக்குதல் திட்டத்தை பாதுகாப்பு குறைவாக உள்ள இலங்கைக்கு பயங்கரவாத அமைப்பு மாற்றி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் போலீசார் கண்காணிப்பு மேலும் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. சென்னை சாந்தோம் சர்ச், வேளாங்கண்ணி மாதா சர்ச், தூத்துக்குடி மாவட்ட சர்ச்சுகள், மணப்பாடு கடலோர பகுதிகளில் உள்ள சர்ச்சுகள் என பலவும் தற்போது தீவிர பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப் பட்டுள்ளன.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது! நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், எழும்பூர் கென்னட் லைனில் உள்ள புத்தமடாலயம் ஆகியவற்றுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதனிடையே இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில், இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியவர்கள் எனக் கூறி, மூன்று பேரின் படத்தை வெளியிட்டதாகவும், அபுல் பாரா, அபுல் முக்தார் மற்றும் அபுல் உபைதா ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் என்று கூறப் பட்டதாகவும் தகவல் வெளியானது.

இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் பொறுப்பாளர் ஸஹரான் ஹாஸின் என்பவரே அபுல் உபைதா என்று அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் இலங்கை கடல் பிரதேசத்தின் வழியாக தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், இலங்கையை ஒட்டியுள்ள இந்தியக் கடல் எல்லையில், இந்திய கடலோரக் காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

[su_posts template=”templates/teaser-loop.php” id=”68521, 80828, 80705, 80813, 30593″ posts_per_page=”5″ order=”desc”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories