திட்டம் தமிழகத்தில்… நடத்தப் பட்டது இலங்கையில்! அதிர்ச்சி அளிக்கும் பின்னணி!

church bomb - 2026

தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய குண்டுவெடிப்பு… பாதுகாப்பு காரணமாக இலங்கைக்கு இடம்பெயர்ந்தது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

இலங்கையில் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கப்போவதாக இந்திய உளவுத்துறை, இலங்கை அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்று, இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்று கூறப் படுகிறது. இதனால்தான் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஏதாவது ஒரு நாட்டில் கிறிஸ்தவ சர்ச்சுகளைக் குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்த புதிதாக தோன்றியுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாக 6 மாதங்களுக்கு முன்பே உளவுத் தகவல் கசிந்துள்ளது.

srilanka funeral - 2026இந்தத் தக்குதல்கள், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோர சர்ச்சுகளில் நடத்தப்படலாம் என்று ரகசிய தகவலில் கூறப்பட்டிருந்ததாம். ஆனால் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்ததால், தங்கள் தாக்குதல் திட்டத்தை பாதுகாப்பு குறைவாக உள்ள இலங்கைக்கு பயங்கரவாத அமைப்பு மாற்றி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் போலீசார் கண்காணிப்பு மேலும் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. சென்னை சாந்தோம் சர்ச், வேளாங்கண்ணி மாதா சர்ச், தூத்துக்குடி மாவட்ட சர்ச்சுகள், மணப்பாடு கடலோர பகுதிகளில் உள்ள சர்ச்சுகள் என பலவும் தற்போது தீவிர பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப் பட்டுள்ளன.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது! நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம், எழும்பூர் கென்னட் லைனில் உள்ள புத்தமடாலயம் ஆகியவற்றுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதனிடையே இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில், இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியவர்கள் எனக் கூறி, மூன்று பேரின் படத்தை வெளியிட்டதாகவும், அபுல் பாரா, அபுல் முக்தார் மற்றும் அபுல் உபைதா ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் என்று கூறப் பட்டதாகவும் தகவல் வெளியானது.

இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் பொறுப்பாளர் ஸஹரான் ஹாஸின் என்பவரே அபுல் உபைதா என்று அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் இலங்கை கடல் பிரதேசத்தின் வழியாக தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், இலங்கையை ஒட்டியுள்ள இந்தியக் கடல் எல்லையில், இந்திய கடலோரக் காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

[su_posts template=”templates/teaser-loop.php” id=”68521, 80828, 80705, 80813, 30593″ posts_per_page=”5″ order=”desc”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories